வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*'சுவை' எனும் 'நஞ்சு'* :

*"உங்கள் ஆரோக்கியம் உங்கள் நாவு தேடும் சுவையால் கெடும்".*

*இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*

*அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும்*
*உணவு, உணவு, உணவு.*

*தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.*

*எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌*

*அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.*

*உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. பல உணவகங்களில் இவை இல்லை.*

*ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது*.

*மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது.*

*இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன்.*

*விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.*

*ஒரே ஒரு வகை உணவு பரிமாறப்பட்ட என் சொந்தங்கள் வீட்டில் அனைத்திலும் இரண்டு மூன்று வகை சேர்த்து பரிமாறப்படுகிறது.*

*இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் நடந்தேறியிருக்கிறது.*

*அதனை அவர்கள் உணரவே இல்லை. யூடியூப் போன்ற வலையொலிகளின் உணவு நிகழ்ச்சிகள் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்*.

*ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்.*

*ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்.*

*உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.*

*திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார்.*

*சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்.*

*ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை.*

*இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.*

*அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது.*

*ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர்.*

*இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள்.*

*அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள்.*

*அந்த மக்களைத் தங்கள் கடைக்கு அழைக்க அண்ணாச்சிகளும் அதே பொருளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.*

*இதனால். தமிழ் பொருட்களை உற்பத்தி செய்த பல குடும்பங்கள் அழிந்து இருக்கும். எங்கள் ஊரில் கூட மெட்ரோ என்ற பெரும் கடை மற்ற அனைத்தையும் உண்டு வளர்கிறது.*

*100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி நான்கு மணி நேரம் செல்லும் ரயில் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. மக்கள் அதற்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள்.*

*உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.*

*உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.*

*முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது.*

*ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto தூதுணவு வந்துவிட்டது.*

*இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது,*
*ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது.*

*ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர்.*
*அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.*

*தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது.*

*தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.*

*சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும்.*

*அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.*

*இது நடக்காவிட்டால். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும்.*

*இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.*

*(சிந்திக்க வைத்த பதிவு)*

💎
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

https://youtu.be/DuM9c_3wwMg

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

https://youtu.be/k43vhadI7mU

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
நல்லதை பகிர்வோம்...
நன்றிகள் 👍🙏
வாதம் வைத்தியம்
Photo
*இயற்கையின் மடியில் ஒரு நாள் - பண்ணை சுற்றுலா...*

*இயற்கையை நேசிக்கும், விவசாயத்தை விரும்பும் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போம் ஒரு நாள் முழுதும்.*

*நாள்:* டிசம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை

*இடம்:* செம்மேடு, கோயம்புத்தூர்

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

🍃 இயற்கை எழில் மிக்க வெள்ளியங்கிரி மலை சாரலில் உள்ள பண்ணை பார்வையிடல்

🏊‍♂️ பண்ணையில் ஓர் ஆனந்த குளியல்

🌙 ஆதியோகி திவ்ய தரிசனம்
(A powerful video imaging show)

🥗 நா ஊறும் நலம் தரும் இயற்கை உணவுகள்

⛹🏻‍♂️ மீண்டும் பள்ளிக் காலம் திரும்பும் விளையாட்டுகள்

பதிவு கட்டணம் ₹ 300

*முன்பதிவு அவசியம்*

சுற்றுலாவில் கலந்து கொள்ள https://forms.gle/mv37tYmv3Vv8ojtDA
இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்
அல்லது
83000 93777, 94425 90077
என்ற எண்ணை அழைத்து உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.

*விவசாய தகவல்களை தொடர்ந்து பெற கீழ்க்கண்ட லிங்கை https://bit.ly/3M31bLD பயன்படுத்தி உங்கள் மாவட்ட whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.*

நன்றி
மண் காப்போம் இயக்கம்

ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
📣♦️🗣💬🔊 🌷
💫சித்த வித்தை
Q & A # 10 :👆
https://t.me/truthsofsivayoga/9079
ஐயம் தெளிதல்
21 August 2022 👆

அன்றாட
பிழைப்பே சிக்கலாய்,
பற்றாக்குறையாய்
இருக்கும் போது..
யோக - ஞான
ஆன்ம தேடுதலில்
ஈடுபடுவது தேவையா!?

தேவைதான் எனில்
அப்பாதையில்
முன்னேறி செல்வது
பற்றி கூறுங்கள் ஐயா.

⁉️ஐயம்தெளிதலின்
🗣️தொகுப்பு 👇
https://t.me/truthsofsivayoga/9079

🙏🌷🙏

Q & A # 9 : 👇
@ 10.7.2022

https://t.me/truthsofsivayoga/8706
ஒரு வாசி யோகியர்
உணவு முறை எப்படி நடைமுறையில்
கடை பிடிக்க வேண்டும், குறிப்பாக நுரையீரல் / சுவாசகோச
மாசு இல்லாமல்
இருக்க உபாயம் அறிய செய்யுங்கள் அய்யா 🙏😊
Forwarded from 🌞RJN🌙 @_Singapore / Karur
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Part 3-2 & 4-_Breathing Science on Yogicway book
KARUVOORAAN
"மூச்சுகலை"
குரலொலி நூல் :

சுவாச செயல்பாடின்
அந்தரங்க/சூட்சும விளக்கம் :
Part 4 -1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9975

*மூச்சுகலை*
(யோகிகள் கடைபிடித்த
சுவாச அறிவியல்)
நூலாசிரியர்.
ராமசரக்கா யோகியின்
குரலொலி தொகுப்பு முயற்சி.

சுவாச செயல்பாடின்
வெளிப்படை விளக்கம் :
Part 3_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9775

முன்பகுதிகள் :-
"சுவாசமே வாழ்க்கை"
Part 2_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9753

Part 1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9734

Voice book Tamil intro : 👇
குரலொலி நூல் அறிமுக பகுதி : 👇
https://t.me/truthsofsivayoga/9733

தமிழ் PDF மின்னூல் 👇
https://t.me/truthsofsivayoga/9731
நமது குழந்தைகளின்
உடல்நலம், (வலிமை,வன்மை)
அதிகரிக்கவும்..
💦
உண்ணும் பண்டங்களின்
விசக்கலப்புகள் வெளியேற்றிடவும்..
💦
10வயதுவரை
அனுதினமும்..
மூலிகை சத்துக்களை
உட்கொண்டு பழகி
வர செய்வதனாலும்..
💦
பிற்காலத்தில்
வரும் பல உடல்குறை
உபாதைகள் வரவிடாமலும்..
காக்க..
நமது பாரம்பரிய
உரைமருந்து பழக்கத்தை
கடைபிடித்து வாருங்கள்.👍

தேவையானவை : (2மாதத்திற்கானது for 1 Child)
1. SKM உரைமாத்திரை - 3 box
2. SKM வஜ்ரவல்லி -1 bx
3. SKM இருமல்சஞ்சீவினி - 1bx
4. வல்லாரை மாத்திரை - 1box

அனைத்தையும் நன்றாக
இடித்து பொடி செய்து எடுத்து வைத்துக்கொண்டு.
தினம் காலை உணவுமுன் 5 மிளகளவு கொடுத்து பழகி வர
நல்ல ஆரோக்கியம்/பலன் தெரியும்.

ஆங்கில மருத்துவமும்,
மருந்துகளும் விரைவில்
தவிர்த்து நலமடையசெய்யும்.

வேண்டுவோர்..
அருகாமையில்
நாட்டு மருந்து கடைகளில்/
குகனேஷ் ஹெர்பல்ஸ்-ஸில்
கூரியரில் வாங்கிடலாம்.

🙏🌸🙏.
★கருவூரான்★

https://t.me/truthsofsivayoga/95
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
GIF
*_🟢🙏🏽🟢🙏🏽🟢🙏🏽🟢🙏🏽. உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!_*

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..!

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகிவிடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்
அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு
காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக,
உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!

அக குடும்பத்தை மறந்து விடாதே.
உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்புமிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!

உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!

உடல் அனுமதித்தால் தான் ஒருவன்
சித்தனும் ஆக முடியும்..!

ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும்
என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!

ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!

ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!

ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும்
அழைத்துசெல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!

ஒருவன் அவன் உள் குடும்பமான
உடலை கவனித்தால்..!

அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!

பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

தியானம் நம் மனதோடு பேச செய்யும்.

ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.

அதை தேடு...!!