வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
"நிதானம்"

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,அவரைத் தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார்,
"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.உணவை, நீரை அருகில் வையுங்கள்.ஆனால் உண்ணும் படிக் கூற வேண்டாம்.பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.சீடர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லித் தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்",
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்குப் பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..
எல்லாம் சரியாகும் .
ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம் நீளமானது ..!!

வாழ்க நிதானத்துடன் .
*🙏சித்தவேதம்🙏*

*இரசவாதம்*

*ஸ்திரீ புருஷர்களுடைய சுக்கிலத்தை ஊதி கட்டி நிறுத்தும் போது தான் ஞானம் உண்டாகின்றது.*

*அதை ஊதிக்கட்டி நிறுத்தும் பொழுது மணியாகும்.*

*அதற்காகும் ரசமணி என்று சொல்வது.*

*ரசம் சுக்கிலமாகும்.*

*அந்த சுக்கிலத்தை ஊதிக்கட்டி நிறுத்துவதாகும் ரசவாதம் என்று சொல்வது.*

*ரசம் = சுக்கிலம்.*
*வாதம் = வாயு.*

*அதனால் நம்முடைய ஜீவசக்தி வாயு வடிவாய் வெளியே போய் நசிப்பதை அப்படி நசிக்க விடாமல் நம் உள் வழியாய் மேலும் கீழும் ஊதி சுக்கிலத்தைக் கட்டி நிறுத்த வேண்டும்.*

*அப்பொழுதாகும் நமக்கு பிறவிப் பெரும் பயன் கிடைப்பது.*

*உபதேசித்தவர்*
*சுவாமி சிவானந்த பரமஹம்சர்*
வாதம் வைத்தியம்
Photo
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை

இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான் , குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது

அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது, ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது

மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது

இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது, சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை

வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான், வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான், அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது

தக்காளியும் உருளையும் அப்படி வந்ததே, புகையிலையும் அப்படி வந்ததே

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது, உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது

வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்

தேங்காய் இருந்த இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான்

நோய் பெருகின

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான், ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான். கேரட் , பீட்ரூட் இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொணர்ந்தான், அது அவனுக்கு சரி

ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகபோர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின, விளைவு தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌

சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை, சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு

ஆம் அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்

நோய் பெருகிற்று, அதாவது சூடான பூமியில் சூடு கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்துகொண்டிருக்கின்றான்

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது, இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது

எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெய்யும் கலப்படம், இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன பரிதாபம்

காரணம் அவற்றுக்கு உண்மையான பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல, ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று இல்லா நோய்கள் எல்லாவற்றையும் இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்

ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் காப்பி இருந்தது

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம் இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது, காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌

அவை இன்றியும் வாழமுடியும், அது போக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன, பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.

இவை பெருக பெருக மருத்துவ மனைகளும்
வாதம் வைத்தியம்
Photo
ுகுகின்றன.

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை இந்துமத ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் காணலாம்

இந்து தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே

துளசி போல் அருமருந்தில்லை

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை

தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே

தேர்களில் தெய்வங்களுக்கு வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் இந்துக்களின் உணவினை பாருங்கள்,நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் நோய்க்கு இடம் கொடா

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு, அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்

கருத்தரிப்பு சிக்கல் சிசேரியன் என மறுபுறம். மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும், மாறாக அதெல்லாம் பழமை என ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்

இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இங்கு உருவான இந்து எதிர்ப்பு கோஷ்டிகள்

இந்துமதம் ஒழிய ஒழிய இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு

அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய கே.எப்.சி வரை தொடர்கின்றது

நாம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது, அந்த பாரம்பரியம் இந்து ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்

மாறாக கண்டதையும் உண்டுவிட்டு தெரு தெருவாக கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை

நடக்க வேண்டியது கோவில்களை நோக்கி, அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து..

வாழையடி வாழ்க...
Photo from 🌏Raajan@Singapore🌞
https://youtu.be/fixs0CBxrqc

*யோகியர்கள்*
உணவு &
நீரின்றி
எப்படி வாழ முடிகிறது.!?

அருமையான கருத்துக்களை
*ஈஷா-சத்குரு*
👆இக்
காணொளியில்
விளக்குகிறார்!
👇🏼ஆங்கிலத்தில்!!

https://youtu.be/fixs0CBxrqc
கர்ப்பப்பை நீர்கட்டி
குணமாக்கிடும்
எளிய சித்தர் வீட்டுமருந்து.

அத்திப்பட்டை , அசோகப்பட்டை , கீழாநெல்லி வேர் ( கீழாநெல்லி வேர் கிடைக்கவில்லை என்றால் கீழாநெல்லி பொடி) மூன்றையும்  சம அளவு எடுத்து  நன்றாக  மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ளுங்கள் அல்லது மூன்றும் பொடியாக கிடைத்தால் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து காலை 7.30 மணிக்கு முன் 3 ஸ்பூன் பொடி (மொத்தம் 9 கிராம் அளவு ) எடுத்து  1 டம்ளர் வெண்ணீரில்  கலந்து அருந்துங்கள். 18 நாட்களுக்குள் நல்ல மாற்றம் தெரியும். மொத்தம் 18 நாட்கள் சாப்பிட வேண்டும்.  மருந்து சாப்பிடும் காலங்களில் அசைவை உணவை தவிர்ப்பது நல்லது.


தங்களின் அனுபவங்களையும் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.


- இயற்கை உணவு உலகம்.

http://naturalfoodworld.wordpress.com
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி
வேறு எதுவும் கிடையாது ..

உங்கள் எண்ணங்களுடன் உங்களுக்கு சம்பந்தம்
இல்லாமல் இருங்கள் ..

மனதை விட்டு விலகியே
நில்லுங்கள் ..

எண்ணங்கள் மறையும்
கணங்களில் ..

மனமற்ற நிலையின் கண நேரக்
காட்சியை காணலாம் ..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம்
அவசியப்படாது ..

தியானம்தான் உங்களை மனமற்ற நிலைக்கு
எடுத்துச் செல்லும் ..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில்
உண்மை இருக்கும் ..

உங்கள் மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம்
செயல்பட ஆரம்பிக்கிறது ..

முதலில் உங்கள் உடலைக் கவனியுங்கள்
அடுத்து எண்ணங்களை கவனியுங்கள் ..

உங்கள் உணர்வுகளைக் கவனியுங்கள்
இறுதியில் உங்கள் மனதைக் கவனியுங்கள் ..

உங்களை உள்ளிருந்து கவனிப்பவர்
உங்களுடைய ஆன்மாவாகும் ..

மக்கள் தங்களைக் கவனிப்பதை
விட்டு விட்டு ..

அடுத்தவர்களை கவனிப்பதிலேயே
ஆர்வம் காட்டுகிறார்கள் ..

~ஓஷோ ..