வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
💢💢💢👇💢💢💢

*மனிதன் , ஏன் இன்னொரு மனிதனின்*

இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும் ?

மரணம் உன்னதமானது.
அதை உணரும் போது...
உயிர் உடலில் இருக்காது.

ஒரு மனிதன், எப்போது அச்சம் கொள்கிறான்?

*இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்.*

உலகின் வேறு எதுவும் , மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.

நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை,
நாம் தூக்கி வளர்த்த பிள்ளை, நமது இன்ப துன்பங்களை பகிர்ந்த வாழ்க்கைத் துணை, நம்முடன் சுற்றித் திரிந்த நண்பர்கள்,
இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்.

ஒருநாள் நமக்கும் மரணம் இருக்கிறது என்ற எண்ணமே.... நம்மை ஆட்டிப் பார்க்கிறது.

மனதுக்கு நெருங்கியவரை-
குழிக்குள் இறக்கி
மண்ணிட்டு மூடும் போது ..வரும் வெறுமை...

நமது தலையில் சேர்த்து வைத்திருக்கும் புகழ்,
ஈகோ, அகந்தை, கர்வத்தையும்
சேர்த்து ,அனைத்தையும் மண்ணோடு மூடிவிடும்.

ஒரு மரணத்தை காணும் போது ... மனம் இறங்க வேண்டும்.

"மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் தான்.. ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

பணம் மீது தீராத வெறி,
பதவி மீது தீராத வேட்கை,
இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.

ஒவ்வொரு மரணத்தைக் காணும் போதும்..
நம் மனதில் இருக்கும்
வஞ்சம், பகை, ஈகோ, போன்றவற்றை மறக்க வேண்டும்.

ஒரு பிரேதம் மண்ணில் அடக்கப்படும் போது ....
வஞ்சம், பகை,
ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும்.

மரணத்தின் எண்ணம், நம் இறையச்சத்தை அதிகரிக்கும்.

மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம், மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது... நம் மனமும் அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.

மண்ணின் இயற்கை சுழற்சியை ஒழுங்கு செய்யும் ஒரே விஷயம்
மரணம் மட்டுமே!

மரணத்தை நேசிப்போம்!
காரணம் , நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்ட பரிசாக மரணம்தான் காத்திருக்கிறது.

மண்கலம் கவிழ்ந்த போது... வைத்து வைத்து அடுக்குவார்!
வெண்கலம் கவிழ்ந்த போது... வேணும் என்று பேணுவார்!
நன்கலம் கவிழ்ந்த போது... நாறும் என்று போடுவார்!

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் ....அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள் !

வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் ....அது வேணும் என்று பாதுகாப்பார்கள்!

ஆனால் .....

நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது .... அதனைப் பிணம் என்று இகழ்ந்து... அது கிடந்தால் நாறும் எனக் கூறி, குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள் !

இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத எண் சாண் உடம்பில் ,

உயிர் இருக்கும் போதே....
மெய்பொருளை நாடி
மெய் தவம் செய்வோம்

மற்றும்

நம்மால் இயன்ற நல்லதை மற்றவர்க்கு செய்வோம்...

நாமும் வாழ்ந்து.. பிறரையும் வாழவைத்து... மனநிறைவு கொள்வோம்!
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Naan Yaar.png
332.6 KB
நான் யார் ?!

ரமண மகரிஷி யின் நூல் கருத்துக்களை..
சிறு சிறு விளக்கத்துடன்

சுவாமி பிரபஞ்சநாதன்
அவர்களின்
குரலொலியில்..

https://t.me/truthsofsivayoga/11728

ஒலி நூலாக
இங்கே 🗣🎤🎧 பகிரப்பட்டுள்ளது.
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
நம்பிமலை. யாத்திரை+அக்னி நிகழ்வு 17,18 Dec2023 நிகழ்விற்கு
முன் தயாரிப்புக்காக
விருப்பப்படுபவர்கள்.. அதற்கான" வழிமுறைகளை..
பரிமாறிக்கொள்ள இத்தளம்..
https://chat.whatsapp.com/K1NEfI37wHSKIgh5MSICVq
இச்செயலி குழு பாத்திரம் உதவும் 🙏
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Video
அக்னி வளர்த்தல்
நிகழ்வு

டிசம்பர் 17 @10am to 4pm

நவக்கிரக தம்பதியர் ளாக
சித்தர்களும் அபிசேகிக்கும்
புராண ஸ்தலம்
கரும்குளம் -
திருநெல்வேலி

https://maps.app.goo.gl/e5NHnDh3ZUcVKppT9
மகேந்திர கிரி
நம்பிமலை கோவிலும் அருவியும்

( தேவ-முனிவர்கள் வந்து உலாவும் மகிதலத்திற்கு
ஒரு குழுவாக
புனித யாத்திரை)

டிசம்பர் 18 @
8am to 4pm

திருக்குறுங்குடி-
திருநெல்வேலி
https://maps.app.goo.gl/s9RjeR9nkhZCphqN6
Forwarded from சித்தன் (Mukunth Senthil)
அகத்தியர் சரக்கு-72.pdf
220 KB
இந்த பதிவில் இருப்பது "அகத்தியர் சரக்கு வகை குணாதிசயங்கள்" யென்னும் ஓலை சுவடி பிரதியின், உரைநடை வடிவில்.இதில் மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்,பாசாணங்கள், உபரசங்கள், உலோகங்கள் இவற்றை கட்டு& பற்ப & செந்தூரம் செய்யும் மூலிகைகள் பற்றி இரத்தின சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. இதிலுள்ள (மூலிகைகள்& பாசாணங்கள் & உபரசங்கள்) பற்றி விரிவாக தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய நூல்கள் 1) மூலிகை குணபாடம்,2)தாது ஜீவ வர்க்கம் 3) காலாங்கி நாதர் மலைவளம் 4) கோரக்கர் மலைவாகடம்,5) போகர் மலை வாகடம்,6) கொல்லிமலை கலிங்கம் போன்ற நூல்களில் அரிய மூலிகைகள் பற்றி விளக்கம் உள்ளது. சில தோழர்கள் கேட்டுக் கொண்டதால் பாடல் வடிவில் உள்ள தை உரைநடை வடிவில் பதிவு செய்துள்ளேன்,படித்து பயன் பெறுங்கள்.பரம்பரை சித்த வைத்தியர் (அ.முகுந்த்செந்தில்)
வாதம் வைத்தியம்
Photo
*உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்*

1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்

2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்

3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்

4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து

5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து

6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து

7. சூரிய ஒளியும் ஒரு மருந்து

8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்

9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம்

10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்

11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்

12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்

13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்

14. சரியாகச் சிந்திப்பதும்
சரியான மனநிலையில்
இருப்பதும் ஒரு மருத்துவம்

15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்

*இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்*.
🌹🌸😊😊😊😊🌸🌹
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
🔥அக்னி வளர்த்தல் 🔥 என்ற கிரியை முறை வழிபாட்டை

நமது இல்லத்தில்
பழகிவருவதால் கிடைக்கும் பலன்கள்  :-

சிறியளவில்.. அக்னியை  எழுப்பி மந்திரமோதி புனிதமான மனநிலையோடு வழிபடுவதால்
அச்செயல் முறை நமக்கு
பல நன்மைகளை  மரபு ரீதியாக வழங்கி கொண்டிருப்பதாக பாரத பாரம்பரியத்தில் நம்பப்படுகிறது,

அவற்றுள் சில பயன்கள் பற்றி :

🔥 வளி மண்டலத்தையும் நமது
சுவாச சூழலையும் சுத்தப்படுத்தி பாதுகாக்கிறது.

🔥மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு உறுதி செய்கிறது.

🔥 மனதிறன்களை மற்றும் உயிர்ச்சக்தியையும் பாதுகாக்கிறது.

🔥 மேம்பட்ட மன தெளிவு
மற்றும் அதிக கவனம் செய்யும் தன்மையை வளர்க்கிறது.

🔥 மேம்பட்ட படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வையும் தருகிறது.

🔥 ஆன்மீக விழிப்புணர்வும்
மன அமைதியையும் அன்றாட வாழ்வில்
அதிகரிக்க செய்கிறது.

🔥 தீய ஆவிகள் தொந்தரவு மற்றும் மாந்திரீக இடையூறுகளின் வீரியத்தை தடுக்கிறது.

BENEFITS OF PRACTISING AGNIHOTRA Agnihotra is believed to have many benefits, including:
🔥 Purification of the atmosphere.
🔥Improved health and well-being.
🔥Increased energy and vitality.
🔥Improved mental clarity and focus.
🔥Enhanced creativity and intuition.
🔥Increased spiritual awareness.
🔥Preventing for black magic and evil spirits disturbance.


திருநெல்வேலி - கரும்குளத்தில்
17 Dec2023  அன்று நிகழவுள்ள..
"அக்னி வளர்த்தல்" மற்றும்
18Dec நம்பிமலை யாத்திரை+
பங்குகொள்ள விருப்பப்படுபவர்கள்..

முன் தயாரிப்புக்காகவும்
ஒருங்கிணைப்பிற்காவும்
சில வழி முறைகளை..
பரிமாறிக்கொள்ள வாட்ஸ்ஆப் குழு👇🏻
https://chat.whatsapp.com/K1NEfI37wHSKIgh5MSICVq
இச்செயலி ☑️🤝குழு பாத்திரம் உதவும்.

📱மேலதிக தகவலுக்கும்:📞
முன்பதிவு 📝
தொடர்புக்கும்
(Whatsapp #)
+91 94988 25277
பிரம்மஸ்ரீ.
விஷ்ணு ஐயா
& கோமதி
+91 98412 90421
உங்க Heart-அ பத்திரமா பாத்துக்கணும்னா இதை Full-ஆ தெரிஞ்சுகிட்டு…
BBC News Tamil
இன்றைய காலத்தில்
பிட்னஸ் இளைஞர்களும் ஹார்ட் அட்டாக் மரணத்தில் விழுவதன் காரணம் என்ன?!