வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*ஆங்கில மருத்துவம் எப்படி செயல்படுகின்றது அவசியம் படியுங்கள்*

* நாம் வீட்டை பெறுக்கி அந்த குப்பையை. வெளியே போடாமல் கட்டிலுக்கு அடியில் சேர்த்து வைத்துவந்தால் நிலமை என்னவாகும் முதலில் எறும்பு வரும், பிறகு கரப்பான்வரும் கரப்பானை சாப்பிட பல்லி வரும், பிறகு எலி வரும். நிலைமை மோசமாகி போனால் பாம்பு வரும், பாம்பு வந்துவிட்டால் எலிக்கு மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும் பாதிப்பாக அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

* உடலில் கழிவுகள் சேர சேர நோய்கள் அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள் நம்மை விட்டு நீங்கும்.*

* ஆங்கில மருத்துவம் சாதாரண சளி முதல் பெரும் பெரும் வியாதிகள் வரை எதையும் தீர்ப்பதில்லை, மாறாக நம் உடலுக்குள்ளேயே ஒளித்து வைக்கின்றது.*

* கடுமையான தலைவலி, மாத்திரையை போட்டதும் எப்படி நீங்கியது. வெரி சிம்பிள் நம் மூளைக்கு வலியை உணர்ததும் நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?*

* பேதிக்கும் இதே சங்கதிதான், பேதியாகும் போது மூளையானது நமது உடலில் இருக்கும் நீரை எல்லாம் குடலுக்குவர செய்து கழிவை வெளியேற்றும். இப்போது நாம் போடும் பேதி மாத்திரை குடலுக்கு வரும் நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர் சப்ளையாகாததால் பேதி நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே தேக்கம் அடைகின்றது.*

* சளி, இருமல் மாத்திரை போடுகின்றீர்கள் அந்த மாத்திரை உங்களுக்கு அதிகமாக தூக்கத்தை வரவழைத்து சளி வெளியேறுவதை தடுக்கின்றது. உடலின் கழிவை வெளியேற்றும் சக்தியை தடுத்து சளி நுரையீரலில் தேக்கமடைகின்றது.*

* கழிவுகள் வெளியேற குறிப்பிட்ட அளவு வெப்பம் உடலுக்கு தேவை, அதுதான் ஜூரம் நாம் ஜூரத்தையும் விட்டோமா? அதையும் மாத்திரைகளை போட்டு தடுக்கிறோம். ஆக கழிவுகளை வெளியேற நாம் எந்தவகையிலும் உடலோடு ஒத்துழைப்பதே இல்லை.*

* ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தடுத்து கொண்டே வருவதால்....*

* நமது உடலே சாக்கடையை.. போல மாறிவிட்டது. இனி மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும் பல வித வியாதிகள் பெயரே வைக்க முடியாத வியாதிகள் டாக்டருக்கே புரியாத வியாதிகள் என பல வருகின்றன.*

அவர்களும் அதற்கு எலிகாய்ச்சல், கோழிகாய்ச்சல், பன்றிகாய்ச்சல், நாய்காய்ச்சல் என்று விதவிதமாக பேர் வைக்கின்றாா்கள்.*

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை
தள்ளிப்போடுங்கள். அமெரிக்காவில்
கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை...

3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி டொம்பெரிடன் (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு லோபிரமைட் (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்தி விடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து
வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத் தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத்
தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட
நாம் கவனிக்காது விட்டு விடுவோம்
என்பதாலோ என்னவோ எந்நேரமும்
கவனிக்க ஏதுவான உணர்ச்சி
மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று
அறிமுகப்படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே
சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து
இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும்
செயலை தடுத்து, கழிவுகளை
உடலிலேயே தங்கவைத்து,

மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்.

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்கியம் அனுபவியுங்கள் .

வரும் காலங்களில் சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல் என்று வைப்பார்கள் போல?*

எனவே எந்த நோயையும் குணப்படுத்தும் திறன் இல்லாத ஆங்கில மருத்துவத்தை புறக்கணியுங்கள்.*

* இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.*

நீங்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது மாற்றமே மானுட தத்துவம்*

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்!!!.
வாதம் வைத்தியம்
Photo
*எண்ணெய் குளியல்*

* உடல் சூடு தணியும்,

* கண் எரிச்சல் நீங்கும்.

* பார்வை தெளிவாகும்.

* வியர்வை நாற்றம் நீங்கும்.

* மயிர் கால் துளைகள் சுத்தப்படும்.

* நரம்புகள் பலம் பெறும்.

* கால்சியம் உடம்பில் சேர விட்டமின் டி தேவை இந்த விட்டமின் எண்ணெய் குளியல் மூலம் கிடைக்கும்.

* சருமம் மிருதுவாகும்.

* தோல் நோய் நீங்கி தோல் பளபளபாகும்.

* சிறுநீரகப் பிரச்சனைகள் நீங்கும்.

* சிறுநீர் நன்றாக பிரிந்து வெளியேறும்.

* வாத பித்த கபத்தை சமநிலைப்படுத்தும்.

*குறிப்பு*

* ஆண்கள்- சனி, புதன்
பெண்கள்- வெள்ளி, செவ்வாய் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

* அம்மாவாசை, பௌர்ணமி ,தமிழ் மாத பிறப்பு ,தமிழ் வருட பிறப்பு ,அவரவர் ஜென்ம நட்சத்திரம், நோய்வாய் பட்ட நாட்கள், எண்ணைக்குளியல் எடுக்கக் கூடாது.

* பகலில் தூங்குதல், சிற்றின்பம், வெயிலில் அலைதல் கூடாது.

* இரவு நீண்ட நேரம் கண் முழித்த அன்று எண்ணெய் குளியல் கூடாது.

* எண்ணெய் குளியல் அன்று குளிர்ச்சி தரும் பழங்கள் கூடாது, மாறாக வெப்பம் தரும் கொள்ளு பப்பாளி எடுக்கலாம் .

* மாதவிடாய் போது எண்ணெய் குளியல் கூடாது.

* வெதுவெதுப்பான நீரில் குளித்தல் வேண்டும்.

**கிரகண நாட்களில் & சந்திராஷ்டம,
ஜென்ம நட்சத்திர நாளிலும் எண்ணெய் குளியல் முறை கைகொள்ள கூடாது.
வாதம் வைத்தியம்
https://youtu.be/lr-A22Pu2fQ https://youtu.be/-szFdHdu0SA
காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள்:

1 - வலுவான, அபரிதமான நினைவாற்றல்.

2 - இரும்பு இதயம்

3- சுவாச மண்டலம் சுத்தமாகி, இருமல், சளி குணமாகும்.

4-மூட்டுகள் சிறப்பாக இயங்கும்.

5 - கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து வயிற்றை சுத்தம் செய்து வாய் சுத்தமாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.

6 - பற்களின் நோய் தொற்று குணமாகும்.

7 - கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.

8 - பார்வைதிறன் அதிகரிக்கும்.

9 - குரல்வளை மற்றும் டான்சில்ஸ் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது

10 - இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ஜீவமாளிகையில் ஜீவன் |ஞான உரை - 76 | @channelartindia
channel art india
உடல் எனும்
*ஜீவ மாளிகை* கூட்டில்
*ஜீவன்*
உலவும்
நிலைகளை
நிலையாமைகளை
பற்றி..

கழுகுமலை.
கழுகாசலதேவன்
ஐயா பகிரும் ஞான கருத்துக்கள்
👌🗣️🎧👍
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*சென்னை 602002*
பிரம்மசூத்திரகுழு
*வளாகத்தில்..*
https://youtu.be/X1LNHXXelb8

*2023 ஏப்ரல் 23* லில்
*சித்தி சாதனா*
*1Day நிகழ்வு* நிகழுவதற்கு..

சித்தர்-அருளால்
வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

*நிகழ்விடம் :*
https://maps.app.goo.gl/jWziGUBV3vGMTvvY7

Siddhi - *Saadhana*
Practical *Workshop* (1Day)
சித்தி - *சாதனா*
*பயிலறங்க* நிகழ்வு
(ஒருநாள்)

*ஆத்ம* 🙏வணக்கங்கள்

*ஊர்த்துவகதி*
வசமாக்கும் *உபாயங்கள்* -
(யோக சாதனத்தில்
*வாசி கதி*
சித்திக்க சில *கற்பசாதனா* செயல்முறை
நுட்பங்களை/
தேர்ந்த சித்தர் பழக்கங்களை *வாழ்வியலை*

*சித்தர்கள்* வழியில்-உடலை *யோகியர்* போல *பேணு* வதற்கான
வழிகளை
*கற்கும் முயற்ச்சி* )

கண்டிப்பாக
*பிரம்ம சூத்திரகுழு*
அன்பர்கள் &
*சித்தவித்தை* பெற்றவர்கள் மட்டும்

[ *70பேர் வரை* ] தேர்ந்த *சிவயோக சாதனை* யாளர்களுக்கானது.

அவர்கள்
(முன்பதிவு செய்தவர்கள்) மட்டுமே
பங்குபெற இயலும்.👍
(**வேறு வகை
வாசியோகங்கள்
பழகுவோர்களும், 70வயது தாண்டிய முதியோர்க்கும்,
நேரடியாக வருவோர்க்கும்
*அனுமதி இல்லை* .)

*வாசி மௌன* சாதனங்களில்..
அடியேனாகிய
பிரம்மஶ்ரீ. ★கருவூரான்★

*கற்பமுறை* சாதனா
நுட்பங்களையும்,
*கைபாக - செய்பாக*
அனுபவ
முறைகளையும்..

*கபம்* / *கோழை* யை
*அகற்றி* *வாசிகதி* லயமாகிடும் *நோக்கில்* ..

யோகியர்/சித்த மார்க்க வழியில் *முன்னேற்ற*
மடைந்திட
சிரத்தை/
அதீத நாட்ட
முடையவர்களுடன்
நேரிடையாக
ஒரு *பகிர்தல்* /
பயிற்றுவிக்கும் ..

ஒரு நாள்
(2023 @ *April 23 ஞாயிறு*
8am to 5pm)
நிகழ்வாக..

ஒரு *ஞான தானம்*
சென்னை.
போளி வாக்கத்தில் சிவராஜயோக பாடசாலை வளாகத்தில்
நிகழ்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய
மேலதிக *தகவல்களுக்கு* :
பிரம்மஶ்ரீ. *விக்னேஷ்*
(Whatsapp
text/voice only)
+91 85261 44047
&
+91 98412 90421
வாதம் வைத்தியம்
Photo
நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நன்றி 🙏🏻🌷🙏🏻
...