வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சனிக்கிழமை வரும் தை அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து செய்ய வேண்டியவை...*

ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும்.இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். இந்த ஆண்டு தை அமாவாசை 21-ம் தேதி (நாளை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்தநாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.இதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி! தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

🙏🌹🙏🌷🙏
*இதுவரை யாரும் சொல்லி தராத 35 வகையான காய்கறிகள் பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

*காய்கறிகளின் மந்திரி சபை*

💺 *பிரதமமந்திரி* :
💪 அரசாணிக்காய்
🌞 தசை மண்டலம்
💺 *உள்துறை அமைச்சர்* :
👇 பீர்க்கங்காய்
🌞 நிணநீர் மண்டலம்
💺 *வெளியுறவு துறை அமைச்சர்* :
👆 வெண்பூசணிக்காய்
🌞 ஜீரண மண்டலம்
💺 *பொருளாதார அமைச்சர்* :
தேங்காய்
🌞 எலும்பு மண்டலம்
💺 *போக்குவரத்து அமைச்சர்*:
👊 வாழைக்காய்
🌞 இரத்த ஓட்ட மண்டலம்
💺 *கல்வித்துறை அமைச்சர்* :
கொத்தவரங்காய்
🌞 நரம்பு மண்டலம்
💺 *சுகாதார அமைச்சர்* :
👋 கோவைக்காய்
🌞 தோல் மண்டலம்
💺 *நீர்வளத்துறை அமைச்சர்* :
சுரைக்காய்
🌞 சிறுநீரக மண்டலம்
💺 *மின்சாரத்துறை அமைச்சர்* :
👍 முருங்கைக்காய்
🌞 சுவாசமண்டலம்
💺 *பாதுகாப்பு அமைச்சர்* :
👌 எலுமிச்சை
🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம்
💺 *மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்* :
👏 வெண்டைக்காய்
🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம்
💺 *தகவல் தொடர்புத்துறை அமைச்சர்* :
புடலங்காய்
🌞 புலன்கள் மண்டலம்

🙏 *இவர்கள் இறைவனால் மக்களின் நலனுக்காக நியமிக்கப்பட்டவர்கள்*.
😈 *மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது*
Part 4 -2_Breathing Science on Yogicway Tamil Voice book
Breathing Science on Yogicway Tamil Voice book
"மூச்சுகலை"
குரலொலி நூல் :

பிராணனின்
அந்தரங்க செயல்பாடு
Part 4 -2_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/10130

சுவாச செயல்பாடின்
அந்தரங்க/சூட்சும விளக்கம் :
Part 4 -1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9975

*மூச்சுகலை*
(யோகிகள் கடைபிடித்த
சுவாச அறிவியல்)
நூலாசிரியர்.
ராமசரக்கா யோகியின்
குரலொலி தொகுப்பு முயற்சி.

சுவாச செயல்பாடின்
வெளிப்படை விளக்கம் :
Part 3_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9775

முன்பகுதிகள் :-
"சுவாசமே வாழ்க்கை"
Part 2_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9753

Part 1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9734

Voice book Tamil intro : 👇
குரலொலி நூல் அறிமுக பகுதி : 👇
https://t.me/truthsofsivayoga/9733

தமிழ் PDF மின்னூல் 👇
https://t.me/truthsofsivayoga/9731
https://youtu.be/WIYyWcuGf0s

திருமண வாழ்வில்
நுழையும்
இருபாலினத்தவர்களும், குழந்தை செல்வம் தாமதமாவோரும்

சரியான தாம்பத்யம்
(தேக கல்வி) பற்றிய புரிதலுக்கு
👆
இக்காணொளி கருத்துக்களை
அவசியம்
ஆழ கவனிக்கவும்.