வாதம் வைத்தியம்
2.69K subscribers
1.43K photos
197 videos
102 files
536 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
நந்தீசர் ஜீவநாடியினால்
நிகழப் பெற்ற
அற்புதங்களை..

நந்தி மைந்தர்.
சுவாமி.
சித்த குருஜி யின்
சீடர் சித்தரடியான்.
ராஜகோபால் அவர்கள்
நூலாக்கம் செய்துள்ள
60பக்க முதல் பாகம் :
"சித்தர் மகிமை"

Ebook (pdf) Link:
https://t.me/jeevanaadi/3500
https://youtube.com/watch?v=Eeo8MvTseIA&si=MNe3y7mZaBCow3c_

அவசியம் இல்வாழ்க்கை
பெண்கள் /ஆண்கள்

*அறிய வேண்டிய அரிய உண்மைகளை*

ஆரோக்கியமான
வாழ்விற்காக ..

ஓர் ஆய்வாளர்
தெளிவாக எடுத்துரைக்கிறார்.
வாதம் வைத்தியம்
Photo
*கரூரில்* ..
"அக்னி🔥கிரியா"
வரும் 28 ஏப்ரலில்..

🔥 *அக்னி வளர்த்தல்* 🔥
என்பது அனைத்து வகை மக்களும்/குடும்பத்தினரும்
அரை நாள் கலந்து கொண்டு
கற்றுக் கொள்ளும்
அரியதோர்..
தெய்வீகமான..
வாழ்க்கை நல
நிகழ்ச்சியாகும் !🙏

🌿🌻🌍 ⛈️🔥
Time & Date : தேதி/நேரம்:
*28 APRIL*-2024
Sunday ஞாயிறு 
9AM to 2PM வரை.

Venue @ Program /
நிகழ்விடம் 📍:
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞான பீடம்
@ Via KARUR  - NERUR,
*பஞ்சமாதேவி காளிபாளைம்* ஊர்,

முன்பதிவு அவசியம்:✔️👍🏻
Need Pre Registeration 👇🏻
📱+91 8825786958
📱+91 8903504996

PARTICIPATION FEE ₹500:
*பங்களிப்பு நிதி ₹500//* (நிகழ்விடத்தில் செய்வதற்கான
அக்னி கிரியா பொருட்களும்,
தேநீரும், *மதியஉணவும் வழங்க* படும்.)

🌞🙏🌞
அனைவரும்
*ஒன்று கூடி*
பழக வல்ல..
வாழ்க்கை நல மேம்பாட்டிற்கான..
*அக்னி கிரியா*
உபதேச-செயல் முறை
நிகழ்வு
கரூர் நகரத்திலுள்ள
*நெரூர்* செல்லும்
சாலையில்
உள்ள பஞ்சமாதேவி-
காளி பாளையம்
ஊரில் உள்ள "ஸ்ரீ நந்தீஸ்வரர்
பீடத்தின் ஆலய வளாக"த்தில்
நிகழ இருக்கிறது.

🌿🌻🌍 ⛈️🔥
🤝*ஒன்றிணைவோம்*
*நம்மை சுற்றி* உள்ள பூமியும் காற்றும் வெளியும்
சுவாச சூழலையும் *சக்திமிக்கதாக்க* ..
நம் நாடும் நாமும்
குடும்பத்தினரும், அனைவரும்..
நன்றாக இருந்தால்..
நம் ஆன்மீக /சமுதாய மக்களும் *நன்றாகவே இருப்போம்.*

ஆதலால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து *அக்னி கிரியா" வளர்ப்போம் வாருங்கள் அன்பர்களே..
🌞🌏🌏🌙
இவ்  அரிய நிகழ்வு..
*கைலாய* நந்தியம் பெருமானின்
ஆசியுடன்..
  *நந்தி ஜீவநாடி*
வாக்கு அருளும் ஆசான்..
*சுவாமி. சித்த குருஜி*
கரூர். ஸ்ரீ *நந்தீஸ்வரர்*
ஞானபீடத்தின் நிறுவனர்
அவர்களின் தலைமையில் 
ஆரோக்கிய வாழ்விற்காக
வழி நடத்தப்பட உள்ளது.

https://youtu.be/6KfgjN3I_hU?si=ESOVuIho3gIzIniM

🌿🌻🌍 ⛈️🔥
இந்நிகழ்வில்  விளக்கப்படும்  *ரகசியங்கள்* :.
            
🔥*அக்னி கிரியா*  எனும் அக்னி வளர்க்கும் கலை..
 ( அக்னி ஹோத்ரா)
*சுய செய்முறை*💥( நிகழ்விடத்தில்..)
                       
*🌸 வளமும், பொருளும் பெருக்கி தரும் அட்சய மந்திரமும்*  & *உபதேசமும்*!

🌿🌻🌍 ⛈️🔥
🌸 *நீங்களாகவே வீட்டில்*
(சுயமாக - எளிதாக) செய்யக்கூடிய
"அக்னி கிரியா" குறித்த பயிற்சி விளக்கங்கள்*
🌿🌻🌍 ⛈️🔥

! *நமசிவாய*!
🙏நன்றிகள்🙏

https://youtube.com/shorts/Wi2apJbC3Ms?si=XyhH4HDOj-p3AcQA

இந்நிகழ்வு சம்பந்தமான
மேலதிக தகவல்கள் பெறுவதற்கு👇 :-
Program information
Whatsapp group link:
https://chat.whatsapp.com/K1NEfI37wHSKIgh5MSICVq

👆🙏🔥🌞
இத்தகவலை மற்ற
நண்பர்களுக்கும்
குடும்பத்தினருக்கும்
பகிரச்செய்து உதவுங்கள்🙏

நம்மவர்களின்..
ஆரோக்கியத்தையும்..
ஆன்மீக வாழ்வியலையும்  பாதுகாப்போம் !!

🙏🌏🙏
நந்தீசர்
முதலான
கைலாய சித்தர்கள்
🌷 பதம் போற்றி!!


பீடம் வந்தடையும்
குறிப்பு :
(உதவிக்கு
+91 8825786958)

பேருந்து வழி :
கரூர் நகர பேருந்து நிலையம்
>>
நெரூர்/திருமுக்கூடலூர் செல்லும் பஸ்
>>
பஞ்சமாதேவி
பஸ் ஸ்டாப் இறங்கவும்
>>
எதிரில் 10நிமிட
நடக்கும் தூரத்தில்
காளிபாளையம் ஊர்.

📍அமைவிடம் :
ஶ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்,
ப‌ஞ்ச‌மாதேவி - காளிபாளைய‌ம்,
கரூர் - 639004.

Temple Location
in Google Maps
🌎வரைபட 📍 வழிகாட்டி:
https://maps.app.goo.gl/GYRcPfszRDMmdGXb7
வாதம் வைத்தியம்
Photo
ஆன்மீக அன்பர்களுக்கு இன்று ஒரு சிறிய தகவல்.

*புத்தர் பெருமான் தரும் அற்புதமான சிந்தனை*
#கர்மவினை என்றால் என்ன?
கர்மவினை ஓர் சங்கிலித் தொடர்.

புத்தர் ஞானமடைந்த பின், அவர்
உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான்.
அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான்.

ஆனால், எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

ஒருமுறை, ஒரு மதம் பிடித்த யானையை புத்தரைக் கொல்ல ஏவி விட்டான்.

ஆனால், அது
புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,
கண்களை மூடிக் கொண்டது.

சிலர் ஆச்சரியத்துடன் புத்தரைக் கேட்டார்கள்,
''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால், நீங்கள்
அவனை ஒன்றும் செய்வதில்லை ஏன்?
அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?'

'புத்தர் சொன்னார்,
''என்னுடைய கடந்த காலச் செயல்களால் தான் இவை எல்லாம் நடக்கின்றன.

கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.
அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.

இது அவனுடைய செயல் அல்ல.
அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன்.
அப்படியில்லை என்றால்
அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?

இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால்
மீண்டும் ஒரு சங்கிலி உருவாகி விடும்.

என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.

நான் இனி ஒரு புதிய
சங்கிலியை,
வினையை,
கர்மத்தை
எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.'' என்றார்.

ஆகவே,
அன்பர்களே!
காரணம் இல்லாமல்
காரியம் இல்லை.
நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம்.

// புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி! //

From...
புத்தத்துறவி முனியாண்டி சுவாமி.
+60102920248
அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும் தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச்செய்தவரும் 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்த #தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவுநாளில் வணங்குகிறேன். உ.வே.சா அவர்களின் சேவைகளை போற்றுவோம்.
Partagé de mes Notes:
*Detox Drink* : வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இந்த ஜூஸ் போதும்! 70 வயதிலும் 20 போல் சுறுசுறுப்பில் துள்ளலாம்!

வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த ஜூஸை பருகிப்பாருங்கள். உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைக் கண்டு நீங்கள் அதிர்ந்து போவீர்கள். உங்கள் உடலுக்கு இது எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

இதை செய்வது எளிது. உடலுக்கு அத்தனை நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. 70 வயதிலும் 20 வயது போல் உங்கள் உடல் மாறும். ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும்போதுதான் நோய்கள் உண்டாகும்

சருமம் பொலிவிழக்கும். இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படும். கடுமையான முடி உதிர்வு பிரச்னைகள் உருவாகும். மலச்சிக்கல் பிரச்னை அதிகமாகும். ரத்தம் சுத்தமாக குறையும்.

ரத்தத்தை சுத்தம் செய்யும். நமது உடலில் புதிய ரத்தம் ஊறத்துவங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். 

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கல்லீரல், மண்ணீரலில் உள்ள கழிவை வெளியேற்றும். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.

இதிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில், அதிகளவில் வைட்டமின் ஏ, சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட எண்ணற்ற வைட்டமின்களும், மினரல்களும் உள்ளது. 

இதில் பயன்படுத்தக்கூடிய நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். இளநரை பிரச்னையை சரிசெய்யும். முதுநரையை தள்ளிப்போடும். இதில் உள்ள வெள்ளரி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2

வெள்ளரி – அரை

இஞ்சி – அரை இன்ச் (அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்துவிடலாம்)

மல்லித்தழை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் (அல்சர் உள்ளவர்கள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்)

இதை தொடர்ந்து எடுத்து வரும்போது, கல்லீரலில் உள்ள கழிவுகளை நன்றாக வெளியேற்றும். மண்ணீரலை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நாம் அன்றாட உணவில் இதில் சேர்த்துள்ள 3 இலைகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

செய்முறை

எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.

இந்த சாறில் மிளகை சேர்த்து சாப்பிடும்போது இதன் மருத்துவ பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மிளகு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இளநரையும் மறையும். எனவே வாரத்தில் ஒரு நாள் உணவில் மிளகை இதுபோல் பொடி செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும். சருமம் பளபளப்பாகும். ரத்தம் சுத்திகரிப்பாகும். உடல் சுறுசுறுப்பாகும். கல்லீரல்லில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நீர்ச்சத்து கிடைக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
#**Mhd*நாட்டு மருத்துவ குறிப்பு (Remède naturelle)