வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
Aranpani
சிதைந்த
சிவாலயங்கள் திருப்பணி மீட்புகுழு

Applink :
https://play.google.com/store/apps/details?id=org.aranpani.aranpani

உங்களது ஒவ்வொரு
₹100 ரூபாயும்
💯திருப்பணிக்கே
அர்பணிக்கப்படுகிறது.
🙏🌞🙏
தாராளமாக
கொடையளியுங்கள்.
🙏🙏🌷🙏🙏
இன்று அமாவாசை

முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு.

இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்கினால் நற்பலன்களை பெற்றிடலாம்.

திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள்.

வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்யுங்கள். சந்தனம், குங்குமம் இடுங்கள்.

முன்னோர்களை நினைத்து, தினமும் காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும், வம்சத்தையும் வாழ செய்யும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, அமாவாசையன்று, முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்து ஆசியை பெறுங்கள்.

குலதெய்வ வழிபாடு அவசியம் :

இந்த நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

காகத்திற்கு உணவிடுங்கள் :

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக... என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

பலன்கள் :

பித்ரு சாபம் மற்றும் குலதெய்வ சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும்.

உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.
*ஓம் சிவாயநம*

☘️☘️☘️☘️☘️☘️☘️
*சித்தர்கள் திருவடி போற்றி போற்றி*

*பிரண்டை தைலம்*
🍂🌿🍂🌿🍂🌿🍂

*அன்பு உறவுகளே நமது பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி பயனடைந்த‌ மிகவும் சிறப்பு வாய்ந்த மூலிகை பிரண்டை தைலம் ஆகும்*

*பிரண்டைக்கு தமிழில் வஜ்ஜிரவல்லி என்று மற்றொரு பெயரும் வழங்கி வருகிறது உடலை வஜ்ஜிரம் பொல் வைக்க வல்லது என்பதால் இந்த பெயர் விளங்குகிறது*

*பிரண்டை எண்ணை பயன்பாடுகள்*
☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

*எலும்புகளின் காவலன் பிரண்டை இந்த தைலம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் உடைந்த எலும்பை கூட ஓட்டவைக்கும்*

*40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோ பொரோசிஸ் எலும்பை மென்மை அடைய செய்யும் பிரச்சினைக்கு தீர்வு தருகிறது*

*மூட்டுகளில் வலி இடுப்பு வலிகள் ஜவ்வு விலகல் கழுத்து வலி முதுகு வலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி ஆகும்*

*ஆயூர் வேதம் சித்த மருத்துவம் போன்றவற்றில் மருத்துவத்தில் பெரிதளவு பயன் படுத்தப்படுகிறது*

*அன்பு உறவுகளே இந்த பிரண்டை தைலத்தை இயற்கையையும் பிரபஞ்ச பேராற்றலை வணங்கி நமது உடலில் எந்த பாகத்தில் தடவ வேண்டுமோ தடவி கல் உப்பு தண்ணீரில் கலந்து ஒத்தடம் கொடுக்க நம் துயர் தீருவது உறுதி*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*அனைவரின் இல்லத்திலும் இருக்கவேண்டிய இயற்கை அன்னை தந்த மிகவும் சிறந்த வலி நிவாரணி இந்த பிரண்டை தைலம்*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*அன்பு உறவுகள் பிரண்டை தைலத்தை பயன் படுத்தி பயனடைய வேண்டுகிறோம்*

*இயற்கையை நம்புங்கள் அன்பர்களை அவை நமக்காக இறைவனால் படைக்கப்பட்டவை நம்மை கைவிடாது நாம் அதனுடன் பேசினால் மூலிகைகள் நமது துயர் துடைக்கும் அதுவே இறைவனின் சித்தமும்*

*இறைவன் திருவடி போற்றி போற்றி*

*சித்தர்கள் திருவடி போற்றி போற்றி*

*இயற்கையை போற்றுவோம்*

*வாழ்க வளமுடன்*

*அன்புடன்*
*சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம்*

*8838638192*
*வாட்ஸ்அப் மற்றும் கூகுள் பே எண்*
🌿☘️🌿☘️🌿☘️🌿☘️

☘️ஓட்டுனராக பணியாற்றும் உறவுகளுக்கு முதுகில் தடவி கொள்வது மிகவும் சிறப்பு முதுகெலும்பை வலிமையாக்கும்
🍂🌿🍂🌿🍂🌿🍂
*உணவுக்காடு வளர்ப்பு*
&
*மாபெரும் முக்கனி திருவிழா*

*ஈஷா காவேரி கூக்குரல்*

*இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR)*
பெங்களூரு

*தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)*
திருச்சி

*தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்* (NIFTEM )
தஞ்சாவூர்

இணைந்து நடத்தும்..
மாபெரும் திருவிழா

இடம்: புதுக்கோட்டை
நாள்: 23 ஜூன் 2024 ஞாயிறு

முன்பதிவு அவசியம்,

📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
👇
https://bit.ly/FoodForestandMukkaniFestOrg

அல்லது அழைக்கவும்
☎️ 94425 90081
☎️ 94425 90079

பயிற்சி கட்டணம் ₹200
வாதம் வைத்தியம்
Photo
பணம் இருந்தால்...

நகை வாங்கலாம்,
இடம் வாங்கலாம்,
ஆடம்பர பொருள் வாங்கலாம்.

ஆனால்,

ஆரோக்கியமாக,
ஆனந்தமாக வாழ
*இயற்கை வளத்தை* வாங்க முடியாது.

நல்ல மனமிருந்தால்...

நம் சந்ததியர்க்கு,
இந்த உலகத்திற்கு நாம் விட்டு செல்லும் சரியான சொத்து...

இயற்கையான நீர், பிராணன் நிறைந்த காற்று,
இயற்கையான உணவு,
இயல்பான வெப்பம்,
தூய்மையான மனம்.

இவற்றை உருவாக்குவது
இயற்கை வளங்கள் மட்டுமே!

ஆகவே,
குறைந்த பட்சம்...

*ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்*👍

ஆரோக்கியமாக,
ஆனந்தமாக வாழ அடிப்படை தேவையான...

*இயற்கை வளத்தை காப்போம்* 🙏

(கோடை முடிந்ததும் மறந்து விட்டால்...

அடுத்தடுத்த வருடங்கள், இதை விட பெரிதாக அவஸ்தை படுவோம் 🙄)
*💫🔳வீட்டில் கற்றாழை வளர்க்கலாமா?*

கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். இதை ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்த ஜெல்லை சருமத்தில் தடவலாம்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான சரும பிரச்சனைகளை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குகிறது. மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவை பாசிட்டிவ் ஆற்றலுடன் அமைதியை ஊக்குவிக்கின்றன. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஆத்ம வணக்கம்

*சன்மார்க்க சாகாக்கல்வி சாலை*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!

"சத்விசாரம் என்னும் பிரம்ம வித்தை பயிற்சி"
நிகழ்வு தகவல்

இது ஒரு இணையதள வகுப்புடன் (Whatsapp & youtube) மேலும் நேரடி பயிற்சியுடன் இணைந்த ஒரு அரிய நிகழ்வு.

(+ 12 நாட்கள் இலவச மௌன சத்விசார
நேரடி பயிற்சி)

பயிற்சி விவரம்:
3 மாதம் வரை பங்கேற்கும் ஆர்வம் வேண்டும்
( இது ஒரு அனைவருக்குமான இலவசப் பயிற்சி ஆகும்)

📝முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும் ✔️👍🏻

முன்பதிவிற்கான
கடைசி நாள் : 20-06-2024

பயிற்சியில்
உள்ளடங்கும் விசயங்கள்..

1) சுத்த சன்மார்கத்தைப்
பற்றிய சத்சங்கம்.

2) சன்மார்க்கத்தைப் பின்பற்றும்போது நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை (சிவம்) இறை அருளால் சமநிலையோடு நோக்குகின்ற மனோபலத்தைப் பெற்று இன்புற்று வாழ வழி வகுக்கும்.

3)
ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதனால் இறைவனுடைய அருளைப் பெற்று நான் ஏழை என்கின்ற நோய், உடல் நோய், மற்றும் மன நோய் இதில் இருந்து எவ்வாறு விடுதலைப் பெறலாம் என்ற தெளிவு கிடைக்கும்.

4)
தன்னை அறிந்தவன் தன் தலைவனாகிய தனிப்பெரும் தலைவர் அருட்
பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அறியலாம்.

5)
பொறுமை, சகிப்பு, அமைதி இவையே பேரானந்த சிவபோக ஜீவ முக்திக்கான வழி.

6)
தன்னில் விஷமாய் சேர்ந்திருக்கின்ற கப நீரை (வாத, பித்த, கபம்) வெளியேற்றும் முறையாகிய "பிரம்மரி பிராணயாமம்"
(18 சப்த வாசி கதிகள்) பயிற்சி.

7)
வாசியை தன்னைத் தானே உணர வைக்கக்கூடிய "புஜகி கரண பிராணயாம" பயிற்சி.

8)
குண்டலினியை உணரக்கூடிய "ஊர்த்துவ கதி" பயிற்சி.

9)
தியானம் = நிஷ்டையில் நெடுநேரம் அமரக்கூடிய "நெடுந்
தவப்பயிற்சி".

10)
சாதி சமய மத வேறுபாடுகளைக் களைத்து சன்மார்க்க ஒழுக்கநெறியில் நடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற வாழ்வியலை கற்று ஒன்றென்று இரு, நன்றென்று இரு, மரணம் இல்லா பெறுவாழ்வு பெற்று இன்புற்று வாழ்க.


நிகழ்ச்சி வழங்குபவர்&
வழி நடத்துபவர்
& ஸ்தாபகர் :

யோகி-ருத்ரானந்த சம்புவராயர் ஐயா.

ஆசிரம முகவரி :
பிரம்ம வித்தை சித்த ஆசிரமம் & அறக்கட்டளை.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஜவ்வாது மலை, கோவிலூர் கிராமம்.

Whatsapp No:
+91 9940480449
Cell No:
+91 6381897979

Youtube Channel: https://youtube.com/@yogi-rudranandartv1992

அருட்
பெருஞ்ஜோதி அருட்
பெருஞ்ஜோதி! தனிப்
பெருங்கருணை அருட்
பெருஞ்ஜோதி !!🙏
திருமூலர் வழி சீடர்.. ஸ்ரீ போக நாதரின் "ஞான வாசகம்"

"ஒரு பானையின் பயன்பாடு அதனின் வெறுமை எனும் தன்மையில் உள்ளது"

"The Usefulness of the Pot lies in its Emptiness"
~Lao Tzu.
🙏🙏
~சேகரமும், பகிர்வும் :
பிரம்மஸ்ரீ. கரூவூரான்.
www.t.me/truthsofsivayoga/
*தைராய்டு பாட்டி வைத்தியம்..!*

ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கிறது தான்.

நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்கள்ல நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகுது.

இதுனால மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம்.

இதையெல்லாம் நம்ம பாட்டி வைத்தியத்துல சரிபண்ணிடலாம்..

பயப்படத் தேவையே இல்ல...

துளசி,
கண்டங்கத்திரி,
தூதுவளை,
ஆடாதோடை
இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட,
அதிமதுரம்,
கருஞ்சீரகம்,
ஜடமாஞ்சி,
வில்வவேர் தலா 5 கிராம்,
சின்ன வெங்காயம்-4,
இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டா..

எல்லாம் சரியாப்போகும்..

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்வோம்.*