TNPSC GURU🏆🚨🏆
762 subscribers
538 photos
2 videos
80 files
793 links
TNPSC Group 2/2A NEW SYLLABUS Test Batch 2022 BY www.tnpscguru.in Total-32 Tests.

25 Tests - Syllabus Topicwise Test
5 Revision Test
2 Full Mock Test
Both Online test & PDF with Answers in Mail

Join soon
POSTAL TEST BATCH Rs.2000/-
ONLINE BATCH Rs 600
Download Telegram
குறள் : 732
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

மு.வ உரை :
மிக்க பொருள் வளம் உடையதாய் எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய் மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

கலைஞர் உரை :
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை :
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.


Explanation :
A kingdom is that which is desire for its immense wealth and which grows greatly in prosperity being free from destructive causes.

Join @tnpscguruin
குறள் : 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

மு.வ உரை :
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

கலைஞர் உரை :
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

சாலமன் பாப்பையா உரை :
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.


Explanation :
What things are there so dificult to acquire as friendship ? What guards are there so dificult to break through by the efforts (of one’s foes) ?


SHARE AND SUPPORT @tnpsctestbatch
குறள் : 782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

மு.வ உரை :
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

கலைஞர் உரை :
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை :
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.


Explanation :
The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon

Share TELEGRAM @tnpscguruin
குறள் : 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

மு.வ உரை :
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல் நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

கலைஞர் உரை :
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

சாலமன் பாப்பையா உரை :
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

Explanation :
Like learning the friendship of the noble the more it is cultivated the more delightful does it become.

SHARE TELEGRAM @tnpsctestbatch
குறள் : 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

மு.வ உரை :
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

கலைஞர் உரை :
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது

சாலமன் பாப்பையா உரை :
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.


Explanation :
Agriculture though laborious is the most excellent (form of labour); for people though they go about (in search of various employments) have at last to resort to the farmer.

Share and support @tnpscguruin
Join - TNPSC Group 2/2a NEW SYLLABUS online test series 2019 visit https://www.instamojo.com/tnpscguru
TNPSC GURU🏆🚨🏆 pinned «Join - TNPSC Group 2/2a NEW SYLLABUS online test series 2019 visit https://www.instamojo.com/tnpscguru»
குறள் : 691
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

மு.வ உரை :
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் அவரை மிக நீங்காமலும் மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.

கலைஞர் உரை :
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.

Explanation :
Ministers who serve under fickleminded monarchs should like those who warm themselves at the fire be neither (too) far nor (too) near.

TELEGRAM @tnpsctestbatch
குறள் : 1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

மு.வ உரை :
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

கலைஞர் உரை :
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை

சாலமன் பாப்பையா உரை :
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

Explanation :
There is nothing that aflicts (one) like poverty.

SHARE Telegram @tnpsctestbatch
CMLGROUP_II_2018_REGNO (1).pdf
195.3 KB
Emailing CMLGROUP_II_2018_REGNO (1).pdf