TNPSC GURU🏆🚨🏆
762 subscribers
538 photos
2 videos
80 files
793 links
TNPSC Group 2/2A NEW SYLLABUS Test Batch 2022 BY www.tnpscguru.in Total-32 Tests.

25 Tests - Syllabus Topicwise Test
5 Revision Test
2 Full Mock Test
Both Online test & PDF with Answers in Mail

Join soon
POSTAL TEST BATCH Rs.2000/-
ONLINE BATCH Rs 600
Download Telegram
குறள் : 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.

மு.வ உரை :
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது பகைவரை இகழவும் கூடாது.

கலைஞர் உரை :
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.
குறள் : 482
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

மு.வ உரை :
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

கலைஞர் உரை :
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை :
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
TNPSC GROUP 4 RESULT PUBLISHED
Which one of the following States does not have a legislative council?

a) Bihar
b) Karnataka
c) Uttar Pradesh
d) Madhya Pradesh
கீழ்க்கண்டவற்றில் சட்டமன்ற மேலவை இல்லாத மாநிலம் எது?

a) பீகார்
b) கர்நாடகா
c) உத்திரப் பிரதேசம்
d) மத்தியப் பிரதேசம்

For answers visit https://www.tnpscguru.in/2019/11/State-Legislature-TNPSC-Indian-Polity-Questions-answers.html?m=1
How many schedules does the 'Right to Information Act 2005' have?

a) 4
b) 3
c) 2
d) 5


'தகவல் அறியும் உரிமை சட்டம் 2005' - எத்தனை அட்டவணைகளை கொண்டுள்ளது?

a) 4
b) 3
c) 2
d) 5

Answers herehttps://www.tnpscguru.in/2019/10/TNPSC-Indian-Polity-Right-to-Information-Questions-Answers.html?m=1
Streptomycin is active against

a) Gram positive bacteria
b) Gram negative bacteria
c) Viruses
d) Fungi


ஸ்ட்ரெப்டோமைசின்,________ க்கு எதிராக செயல்படுவது ஆகும்

a) கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா
b) கிராம் நெகட்டிவ் பாக்டீரியா
c) வைரஸ்கள்
d) பூஞ்சைகள்

For answers visit -
https://www.tnpscguru.in/2019/10/Nutrition-Health-Hygiene-Human-Diseases-Questions-Answers.html?m=1
குறள் : 400
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

மு.வ உரை :
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும் கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

கலைஞர் உரை :
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை :
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

Explanation :
Learning is the true imperishable riches; all other things are not riches
குறள் : 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

மு.வ உரை :
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல் சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

கலைஞர் உரை :
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை :
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

Explanation :
To speak in an assembly (of the learned) without fullness of knowledge is like playing at chess (on a board) without squares
குறள் : 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

மு.வ உரை :
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

கலைஞர் உரை :
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

Explanation :
The unlearned also are very excellent men if they know how to keep silence before the learned

TELEGRAM @tnpsctestbatch
குறள் : 404
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.

மு.வ உரை :
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

கலைஞர் உரை :
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.


Explanation :
Although the natural knowledge of an unlearned man may be very good the wise will not accept for true knowledge

Join @tnpsctestbatch
குறள் : 732
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

மு.வ உரை :
மிக்க பொருள் வளம் உடையதாய் எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய் மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

கலைஞர் உரை :
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை :
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.


Explanation :
A kingdom is that which is desire for its immense wealth and which grows greatly in prosperity being free from destructive causes.

Join @tnpscguruin
குறள் : 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

மு.வ உரை :
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

கலைஞர் உரை :
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

சாலமன் பாப்பையா உரை :
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.


Explanation :
What things are there so dificult to acquire as friendship ? What guards are there so dificult to break through by the efforts (of one’s foes) ?


SHARE AND SUPPORT @tnpsctestbatch