News J
588 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaவிடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து பல அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  மாதம் மாதம் ஒரு பிரச்சினை என்று போய் தற்போது வாரவாரம் ஒரு பிரச்சினை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சமூக சீர்கேடுகள், சட்டவிரோதமான பல நடவடிக்கைகள் எல்லாம் நடந்த வண்ணம் உள்ளது. ஆணவக்கொலைகள் அதிகரித்து விட்டது. கஞ்சா புழக்கம் பெருக்கெடுத்துவிட்டது. கள்ளச்சாராய உயிர்பலிகள் மலைபோல் எழும்பிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் மக்களுக்கு கஷ்டத்தையும் அச்சத்தையும் தரும் இந்த விடியா ஆட்சியின் லட்சணத்தையும் முறைகேடுகளையும் குறித்து ஆளுநரிடம் மனு ஒன்றினை அளிக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் நாளை காலை பத்து இருபத்தைந்து மணியளவில் மாபெரும் பேரணி திரள உள்ளது.Imageகழகப் பொதுச்செயலாளரின் தலைமையில் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் குழுமி, அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலகம் வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்று கழக முக்கிய நிர்வாகிகள் மனுவினை ஆளுநருக்கு அளிக்க உள்ளனர். இதற்காக சென்னை முழுவதும் அதிமுகவின் தொண்டர்படை தயார் நிலையில் உள்ளது.

via News J : https://ift.tt/o1xfl3W
Mediaகள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை என விடியா திமுக ஆட்சியில் மதுவால் பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில்தான் மற்றொரு கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. சட்ட விரோத மதுவிற்பனையை கண்டித்த அதிமுக உறுப்பினரை திமுக பிரமுகரும் அவரது சகோதரரும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர்.விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இப்படி சிரித்தபடி காட்சியளிக்கும் இந்த திமுக பிரமுகர் தான் தனது அண்ணனுடன் சேர்ந்து கொடூர கொலை செய்திருக்கிறார். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் இந்த திமுக பிரமுகரும் அவரது அண்ணனும் சேர்ந்துதான் ரத்த வெறியாட்டம் ஆடி இருக்கின்றனர்.கோவை மாவட்டம் மாதம்பட்டி அடுத்த கரடிமடை பகுதியைச் சேர்ந்த கோகுல் தென்கரை பேரூராட்சியில் திமுக இளைஞரணி செயலாளராக பணிபுரிகிறார். இவரும் இவரது சகோதரர் ராகுலும் சேர்ந்து காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். கூடவே தங்கள் கரடிமடை பகுதியிலும் மதுபாட்டில்களை 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சட்ட விரோத மது விற்பனையை தட்டிக் கேட்டுக் கண்டித்த அதிமுக உறுப்பினர் செல்வராஜைத்தான் திமுக பிரமுகர் கோகுலும் அவரது சகோதரர் ராகுலும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர்.கோகுலும் ராகுலும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அங்கே சென்ற அதிமுக உறுப்பினர் செல்வராஜ், நீங்கள் பார் எடுத்து நடத்துகிறீர்கள்… ஆனால் 24 மணி நேரமும் இப்படி சட்ட விரோதமாகவும் மது விற்பனை செய்கிறீர்களே…. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து தவிக்கின்றன என்று கூறி கண்டித்திருக்கிறார். இதனால் செல்வராஜுக்கும் கோகுல், ராகுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே கொடூர கொலை சம்பவம் நடந்திருக்கிறது.செல்வராஜை பின் தொடர்ந்து சென்ற திமுக பிரமுகர் கோகுலும் அவரது சகோதரர் ராகுலும் அவரை சரமாரியாக தாக்கி அருகில் உள்ள தோட்டத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே செல்வராஜின் கழுத்திலேயே எட்டி எட்டி உதைத்திருக்கின்றனர். இதில் மூச்சுத் திணறி ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வராஜை அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதோடு தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்திருக்கின்றனர். தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர் செல்வராஜின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.கூலித் தொழிலாளியாக இருந்து வந்த செல்வராஜிக்கு மனைவி, இரண்டு மகள்கள், மகன் இருக்கின்றனர். திமுக பிரமுகரும் அவரது சகோதரரும் சேர்ந்து கொடூரமாக தாக்கி செல்வராஜை கொலை செய்துவிட அவரது குடும்பத்தினர் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.கொலை செய்துவிட்டு தப்பியோடிய திமுக பிரமுகர் கோகுலையும் ராகுலையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஆனாலும் இந்தக் கொலையில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வராஜின் மகள்கள் கோரிக்கை வைக்கின்றனர். செல்வராஜை போலவே மேலும் நான்கு பேரை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கிடையே காவல்துறையினரோ கொலையாளிகளான திமுக பிரமுகர் கோகுலுக்கும் அவரது சகோதரர் ராகுலுக்கும் ஆதரவாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் உயிர்களை பறிகொடுத்த குடும்பங்களின் கதறல்கள் இன்னமும் அடங்கவில்லை. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகரும் அவரது சகோதரரும் அதிமுக உறுப்பினரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

via News J : https://ift.tt/q1Alk3R
Mediaதமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரோ பொறுப்பேற்காமல், அதிமுக மீது குறை சொல்லி கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீராப்பள்ளி மற்றும் நாமகிரிப்பேட்டையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் தங்கமணி கழக கொடியெற்றி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக சீராப்பள்ளி பகுதியில் கொடியேற்ற வருகை தந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனையடுத்து திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்தவர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சரோஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, கழக பொதுசெயலாளர் பிறந்தநாளையொட்டி, கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடி வரும் வேளையில், ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் வெயில் என்றும் பாராமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது, அவர்கள் திமுக அரசு மீது கொண்டுள்ள வெறுப்பை காட்டுவதாக தெரிவித்தார்.மேலும் இவ்விழாவிற்காக கொடிக்கம்பங்கள் நடும்போது வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கொடி கம்பங்களை பிடுங்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார். இதனையடுத்து சட்டத்திற்கு கட்டுப்படுகிறோம் எனவும், மற்ற கொடி கம்பங்களையும் பிடுங்குங்கள் எனக்கூறிய பிறகு, கொடி கம்பம் நட அனுமதித்ததாக கூறினார்.டாஸ்மாக் விற்பனையாளரே மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்க என்ன காரணம் என தெரிவித்ததை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகம் முழுவதும் சந்து கடைகளில் கள்ளச்சாராய விற்பனை உயர்ந்துவிட்டது எனவும் குற்றம் சாட்டினார்.தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம் உயர்ந்துள்ளது என்றும், ஆனால் மின்துறை அமைச்சரும், உயர்கல்வி துறை அமைச்சரும், அதிமுக ஆட்சியில் 20 பேர் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை மக்களை திசை திருப்புவதற்காக பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.மின்சாரத்துறை அமைச்சர் சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது, கொள்கை விளக்க குறிப்பிலேயே கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் இல்லை எனக்கூறியதை நினைவு கூர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, தற்போது இதுபோன்ற சம்பவம் அரங்கேறிய பின்னர் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரே பொறுப்பேற்காமல் அதிமுக மீது குறை சொல்லி கொண்டிருப்பதாக விமர்சித்தார்.தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது அதனை கட்டுப்படுத்துங்கள் என எதிர்கட்சித்தலைவர், விடியா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், அதனை கட்டுப்படுத்த இந்த அரசு தவறியதாலேயே, இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் சூழலில் இருந்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.

via News J : https://ift.tt/lBET4gN
Mediaசமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்று டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு எதிரே பார் இயங்கி வருகிறது. இந்த மதுபான பாரில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகிய இருவரும் இன்று காலை 11.30 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே எதிரே உள்ள பாரில் பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர். இதில், குப்புசாமி மது குடித்துவிட்டு கடைக்கு வெளியே வந்ததும் வாயில் நுரைதள்ளி மயங்கி கீழே விழுந்தார்.  உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதனிடையே, சிறிது நேரத்தில் அவருடன் பிளாக்கில் மது வாங்கி குடித்த விவேக் என்பவரும் மார்க்கெட் பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.பிளாக்கில் மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த தகவல் காட்டுத் தீ போல பரவிய நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே இந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

via News J : https://ift.tt/kmYRl6U
Mediaதமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர், கரடிமடை பகுதியில் திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர் செல்வராஜின் வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த கொலை வழக்கில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை மிக மோசமாக நடத்திருப்பதாகவும், இறந்தவரின் மகள்கள் வருவதற்குள் அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.மேலும் இந்த கள்ளத்தனமான மது விற்பனையில் விடியா திமுகவை சேர்ந்த பலருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வருபவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி கள்ளத்தமாக மதுபானம் விற்பனை செய்ய காவல்துறை மாமூல் வாங்கி கொண்டு அனுமதி வழக்கியதாகவும் குற்றம்சாட்டினார். எனவே இந்த கொலைக்கு காவல்துறையும் உடந்தையாக உள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி சட்டமன்றத்தில் விவாதிப்போம் என்றும் போராட்டம் நடத்துவோம் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்தார். இந்த வழக்கை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கள்ள மது விற்பனையை உளவுத்துறை தடுத்திருந்தால் உயிரிழப்பு நடந்திருக்காது எனவும் உளவுத்துறை தங்களது கடமையில் தோல்வியடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

via News J : https://ift.tt/WKvIHUT
Mediaகப்பலுக்குள் திருமணம், கடலுக்குள் திருமணம் என்று டிசைன் டிசைனாக திருமணத்தை வித்தியாசமாக பிளான் செய்யும் ஜோடிகளுக்கு ஆகாயத்தில் திருமணம் செய்வதற்கு ஆப்ஷன் கொடுத்திருக்கிறது ஒரு நிறுவனம்..! ஆனால் விலை தான் சற்று தலை சுற்றும்..!திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்”, கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்” என திருமணம் குறித்து பல பழமொழி உண்டு. அந்த காலத்தில் சம்ரதாயங்கள் எதுவும் விடாமல் பார்த்து பார்த்து ஒரு திருமணத்தை நடத்த படாதபாடு படுவார்கள் தம்பதியின் வீட்டார்கள். ஆனால் நவீன காலகட்டத்தில் திருமணம் எங்கு, எப்போது, எப்படி நடக்க வேண்டும் என்பதை தாங்களே களத்தில் இறங்கி முடிவெக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு சம்பிரதாயம் என்பதைத் தாண்டி ஒரு ஆடல், பாடல், வெட்டிங் போட்டோகிராஃபி, கப்புள் ரீல்ஸ் என ஒரு பேக்கேஜாக மாறியுள்ளது. இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் தற்போது ஒரு லட்சம் அடி உயரம் சென்று ஆகாயத்தில் திருமணம் செய்யும் முறையைத் தனியார் நிறுவனம் ஒன்று வழங்க உள்ளது.கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.You Can Now Get Married In Space & This “Out Of The World” Experience Costs ₹1 Crore For One Person - ScoopWhoopபுதிய முறையில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் இந்த கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த ராட்சத பலூனில் பல்வேறு இடங்களில் அதிக ஜன்னல்கள் உள்ளன. பூமியிலிருந்து ராட்சத பலூனில் கிளம்பும் ஜோடிகள் சரியாக ஒரு லட்சம் அடி உயரத்திற்குச் சென்றதும் விண்வெளியில் இருந்தபடி பூமியின் இயற்கை அழகைக் கண்டு களிக்கலாம். அப்படி ரசித்துக்கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம்.திருமணம் நடந்து முடிந்ததும் திருமண தம்பதிகள் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்படுபவர். இந்த புதிய விண்வெளி திருமணம் முறைக்கு ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விண்வெளி திருமண சேவையை அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கி வைக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர்.

via News J : https://ift.tt/TtV5XLr
Mediaதமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, விஷச்சாராய மரணம் என தொடர்ந்து குற்றச்சம்பவங்களாக நடந்து கொண்டிருக்கின்றது…. மாநிலமே களேபர சூழலில் இருக்க, எதற்கெடுத்தாலும் வீடியோ வெளியிட்டு நியாயம் கேட்ட “சிங்கத் தமிழன்” சத்யராஜை கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை…..! எங்கே போனார் போலி புரட்சியாளர் நடிகர் சத்யராஜ்….?கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளியாக வந்தவர் நடிகர் சத்யராஜ்…. ஒரு காலத்தில் எம்ஜிஆரின் ரசிகர் என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்டவர்… இன்று ஸ்டாலினிடம் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருக்கிறார்….பொள்ளாச்சி விவகாரத்தில் “கொடூரத்தின் உச்சம் என்று வீடியோ வெளியிட்ட” சத்தியராஜ், கனிமொழி பேசிய மேடைக்கு கீழே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தமிழகமே கொந்தளித்த போதும் காதை பொத்திக் கொண்டு வீட்டிலேயே முடங்கினார்…..தூத்துக்குடி விவகாரத்தில் “ எங்கோ இருக்கும் முதலாளிகள் அவ்வளவு முக்கியமா என கடும் கண்டனம் தெரிவித்தவர் இன்று விஷசாராயம் குடித்து 22 பேர் பலியாகிவிட்ட நிலையில் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.. இது மட்டுமில்லை…! பேரறிவாளன் விடுதலை விவகாரம் உட்பட இன்னும் பல விவகாரத்தில் wantated ஆக entry கொடுத்து, வீடியோ வெளியிட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர்….கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்களின் ரத்தத்தை சொட்டு சொட்டாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசை சத்தியராஜ் கண்டுகொள்ளவில்லை… பொருளாதார சுரண்டல், மதுபானத்தில் கொள்ளை, நில ஆக்கிரமிப்பு,சென்னையின் பூர்வகுடிகள் விரட்டியடிப்பு, மீனவர்கள் பிரச்னை, பாலியல் குற்றங்கள்,என தமிழ்நாட்டின் நிலை படுகுழி நோக்கி செல்கிறது. இத்தனை நடந்தும் நொடிக்கு நொடி வீடியோ வெளியிட்ட, போராளி சத்தியராஜ் இதுவரை ஸ்டாலினுக்கு எதிராக மூச்சு கூட விடவில்லை….தமிழ் சினிமா மொத்தத்தையும் அமைச்சர் உதயநிதி திரைமறைவில் நின்று கொண்டு கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்… சிறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் 3 வருடம் கழித்து வந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சொந்த ஊர் சென்றுவிட்டனர். அநீதிக்கு எதிராக கொந்தளிக்கும் சத்தியராஜ் தான் சார்ந்த துறை கபளீகரம் செய்து கொண்டிருப்பதை அறிந்தும் சிறு துரும்பை கூட அசைக்கவில்லை…அண்ணா திமுக ஆட்சியில் கடுகளவு பிரச்னையை கூட மலையளவு பிரச்னையாக மாற்ற தெரிந்த சத்தியராஜிற்கு,அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழகம் கண்ணுக்கு தெரியவில்லை… 2 ஆண்டுகளாக சைலண்ட் மோடில் இருக்கும் சத்தியராஜை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை, அவரை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

via News J : https://ift.tt/qa0Q6om
Mediaதிமுக ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டில், தமிழகம் குற்றவாளிகளின் தலைநகரமாக மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு பல சம்பவங்கள் அரங்கேறிவிட்டன….நடப்பு ஆண்டில் மட்டும் 181 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது அதை உறுதி செய்கிறது….ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் உள்ள ரவுடிகள் உட்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் பலருக்கும் கொம்பு சீவி விட்டதைப்போல ஆகிவிட்டது…. நாம் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பில் பல குற்றங்களை மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடுகின்றனர்…குற்றவாளிகளை கண்துடைப்புக்காக கைது செய்துவிட்டு மீண்டும் விடுவிடுப்பது, சிறைக்கு சென்றவர்கள் மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது என சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்….. அதற்கு சாட்சியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே சென்னையில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்…கொலை, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்கள், போதைப் பொருட்களை கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என நடப்பு ஆண்டில் மட்டும் 181 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்…. இவற்றில் பல குற்றங்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் போக்கு காட்டியது.எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டனர்…. ஆனாலும் இன்னும் பல குற்றவாளிகள் திமுக ஆதரவோடு பொதுவெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதிலும் பெருங்குற்றங்களை செய்யும் பல குற்றவாளிகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம்தான் தாயகமாக இருக்கின்றது. இதன் காரணமாகவே காவல்துறை குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

via News J : https://ift.tt/3CjHEh6