News J
592 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaபால்வளத்துறை அமைச்சரை மாற்றிய பிறகும் கொஞ்சம் கொஞ்சமாக ஆவின் நிறுவனம் தேய்ந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அமுல் நிறுவனம் கால்பதிக்கப்பப்போவதை கண்டு கொள்ளாமல் திமுக அரசு இருப்பது குறித்தும், ஆவினை விழுங்கப்போகிறதா அமுல் நிறுவனம் என்பது குறித்தும்
அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.பால்வளத்துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் … அந்த துறையின் அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது பலப்பல புகார்கள்… உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் பேர்வழி என்று அவரை அமைச்சரவையில் இருந்து விரட்டியடித்துவிட்டு நாடகம் நடத்தியது இந்த விடியா அரசு.பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் கோரிக்கைகளை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் ஆவின் பால் விலையை மட்டும் ஏற்றி பச்சைக்குழந்தைகள் முதல் பல் இல்லாத பெரியவர்கள் வரை எல்லாரையும் வஞ்சித்தது இந்த விடியா திமுக அரசு.தமிழ்நாட்டில் தினசரி 3.5 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், சுமார் 35லட்சம் லிட்டர் பால் மட்டுமே தற்போது ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது வெறும் 10 சதவீதம் மட்டுமே….மீதம் உள்ள 90% உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கவே திமுக அரசு முனைப்பு காட்டுவதன் மூலம், ஒருவேளை தனியார் பால் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கச்செய்யவே ஆவினை அழிக்கப்பார்க்கிறதா இந்த விடியா அரசு என்று எழுந்த சந்தேகக்குரல்கள் அமுங்குவதற்குள், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்கப்போகிறது என்ற செய்தி மக்கள் மனதில் பேரிடியாக விழுந்திருக்கிறது.ஐயையே,,, இனி பச்சைப்புள்ளைக்கு பாலும் போச்சா இந்த ஆட்சியில … என்று தாய்மார்கள் கதறிக்கொண்டிருக்கையில், சாவகாசமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் திராணியற்ற முதல்வர்.. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டால் போதுமா? இது என்ன முதுகெலும்புள்ள அரசா? யாரைக்கண்டு அஞ்சுகிறது என்றெல்லாம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது கேட்ட ஸ்டாலின், இன்று தன் முதுகெலும்பை வாடகைக்கு விட்டுவிட்டாரா என்று கேட்கமாட்டார்களா பாதிக்கப்பட்டவர்கள்???ஆவின் நிறுவனத்துக்காக பால் கொள்முதல் செய்யும்போது உற்பத்தியாளர்களுக்கு உரிய விலையை கொடுத்திருந்தால் ஏன் அவர்கள் நம்மூரு ஆவினை விட்டுவிட்டு.. குஜராத்தின் அமுலை நாடிச் செல்கிறார்கள்? அதை செய்யாமல் விட்டுவிட்டு தற்போது குத்துதே குடையுதே என்று அலறிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்?தமிழகத்தில் அமுல் நிறுவனமும் இங்கு அதிகளவு பால் கொள்முதலில் இறங்கும் பட்சத்தில் ஆவின் நிறுவனத்திற்க்கே ஒட்டுமொத்தமாக பூட்டை போட்டுவிட்டு, யாரும் இங்கே வந்து பூட்டை ஆட்டாதீர்கள் என்று போர்டு வைக்கப்போகிறாரா ஸ்டாலின்? என்பதே பொதுமக்களின் அச்சமாக உள்ளது…இப்படி தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்கப்போகிறதா திமுக அரசு? உரிய விலை கொடுக்காததால் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்லும் உற்பத்தியாளர்களை உரிய விலை கொடுத்து தக்கவைக்குமா திமுக அரசு? அல்லது ஆவின் நிறுவனத்தை அழித்துவிட்டு அமுல் நிறுவனத்துக்கு வழியை விடப்போகிறதா திமுக அரசு? என்று கேள்விகளை அடுக்குகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/rDtpOkz
Mediaவிடியா திமுக அரசின் ஊழல்கள் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மனு அளித்திருந்த நிலையில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் விவகாரம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கரூர் கம்பெனி என்ற பெயரில் கமிஷன் கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான், வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூரில் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

via News J : https://ift.tt/sJD6kEa
Mediaதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.தமிழக முழுவதும் டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கமிஷன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை பீளமேடு பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகம் மற்றும் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, வருமான வரித்துறையினரின் காரை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஐடி அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

via News J : https://ift.tt/svqdBMO
Mediaஎதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநரை நேரில் சந்தித்து புகாரளித்ததையடுத்து, சென்னையில் சட்ட விரோதமாகவும், உரிய அனுமதியின்றியும் இயங்கி வந்த மதுபான கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.சென்னையில் இயங்கக்கூடிய 900-க்கும் அதிகமான மதுபானக் கூடங்களில், 50-க்கும் குறைவானவை மட்டுமே உரிய அனுமதியோடு இயங்குவதாக எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். இதனையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விடியா திமுக அரசின் நடவடிக்கைகளால் மது அருந்த இடமில்லாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக, மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது குறித்து விடியா திமுக அரசிடம் புகாரளிப்பது, செவிடன் காதில் சங்கூதிய கதையாகவே தொடர்வதாகவும் மனம் நொந்து புலம்பி வருகின்றனர்.

via News J : https://ift.tt/mrjNQXc
Mediaதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்தும், அவர்களது வாகனங்களை அடித்து நொறுக்கி திமுகவினர் அராஜகம் செய்த நிலையில், கட்டம் கட்டப்பட்டதா கரூர் கம்பெனி என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.தமிழ்நாட்டுக்கே தண்ணி காட்டி வரும் டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கட்டம் கட்டி வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருப்பது தான் இன்றைய டாப் நியூஸ்.இந்த ரெய்டால் கதிகலங்கி இருக்கும் திமுகவினர் சோதனைக்கு வந்த அதிகாரிகளின் வாகனங்களை கடுமையாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதால், உயிருக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்படும் தமிழ்நாடு காவல்துறை, வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பளிக்காதது மாபெரும் இழுக்கு என்று அதிகாரிகள் சொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வாங்குவது குறித்தும், டாஸ்மாக் ஊழியர்களிடம் கரூர் கம்பெனி என்ற பெயரில் கமிஷன் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் சர்ச்சை எழுந்தது.இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி திடீரென வருமான வரித்துறை ரெய்டு வருவதற்கு காரணம் என்ன?…ஷங்கர் திரைப்படங்களில் வருவது போல 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியதில் இருந்தே, அவ்வளவு காசு எங்கிருந்து வந்தது ? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது..முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் நடந்திருக்கும் இந்த ரெய்டு ஒட்டுமொத்த திமுகவையுமே மிகப்பெரிய கொதிப்படைய வைத்துள்ளது.கடந்த காலங்களில் செந்தில்பாலாஜிக்கு எதிராக பேசிய ஸ்டாலின், அவர் திமுகவிற்கு வந்ததும், அவர்மீது போட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்கி அங்கும் யூடர்ன் தான் போட்டார் என்பது உலகறிந்தது.பட்டி ஃபார்முலா, சிக்கன் பார்முலா, என பல பார்முலாக்கள் அறிமுகம் செய்த செந்தில் பாலாஜி இன்று ஐடி ரெய்டுக்கு ஒத்துழையாமை பார்முலாவையும் அறிமுகம் செய்து தன் உண்மை முகத்தை காட்டியிருக்கிறார்.ஏற்கனவே திமுக எம்எல்ஏக்களின் வீடுகளில் நடந்த ரெய்டுகளுக்க வாய்திறக்காத திமுகவின் ஆர்எஸ்.பாரதி, டிகேஎஸ். இளங்கோவன் எல்லாம், தற்போது செந்தில் பாலாஜிக்கு மட்டும் பொங்குவது ஏன்? டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறைகளில் இன்னும் என்ன பார்முலாக்களை செய்திருப்பார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கும் வருமா? இந்த ரெய்டால் திமுக கம்பெனியின் திராவிட மாடல் ஆட்சியின் அஸ்திவாரம் ஆட்டம் காணுமா? அதிகாரிகள் கட்டம் கட்டியிருப்பது கரூர் கம்பெனிக்கா அல்லது ஸ்டாலினின் விடியா ஆட்சிக்கா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.


via News J : https://ift.tt/T5oeX2b
Mediaதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் விவகாரம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கரூர் கம்பெனி என்ற பெயரில் கமிஷன் கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான், வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

via News J : https://ift.tt/FR9dUMV
👍1
Mediaஈரோடு திண்டல் பகுதியில் உள்ள டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரராக உள்ள சச்சிதானந்தம் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆய்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில்  நேற்று சோதனை நடைபெற்று வந்ததையொட்டி இன்று இரண்டாவது நாளாக சோதனையும் நடைபெற்று வருகிறது.குறிப்பாக இன்று, டாஸ்மாக் லாரிகள் ஒப்பந்ததாரராக உள்ள சச்சிதானந்தம் வீட்டில் 2.1 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமானது கணக்கில் வராத பணமாகும். ஆகவே அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சச்சிதானந்தம் தொடர்பான அலுவலங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது. இன்னும் கூட கரூர் மாவட்டங்கள், கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

via News J : https://ift.tt/LR8Qex6
Mediaசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ட்விட்டர் பக்கங்களில் சுமார் 5,000 புகார்களுக்கு மேல் பதில் அளித்துள்ளது.சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக வலைதள செயலியை உபயோகப்படுத்துவதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காவல்துறையின் செயல்பாடுகள் சென்றடைவது எல்லா நேரத்திலும் உயர்ந்த தன்மையாக உள்ளது மற்றும் சுமார் 16,000 நபர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்துள்ளது.இவ்வாறு சமூக வலைதள செயலியை பயன்படுத்தும் சென்னை பெருநகர காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 1,35,927 நபர்கள் பின் தொடர்கின்றன இச்செயலியானது “@chemalpolice” என்ற ஐடி மூலம் இயங்கி வருகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 75,271 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது “@ChennalTraftio” என்ற ஐடி வாயிலாக இயங்கி வருகிறது.சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் செயலியின் மூலம் சாலைப் பயனர்களுக்கு போக்குவரத்து ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் பிறருக்கு போக்குவரத்து மாற்றங்களைப் பற்றிய எச்சரிக்கை செய்திகளைத் தெரியப்படுத்துவது இந்த ட்விட்டர் பக்கத்தின் முக்கியமான நோக்கம் ஆகும். சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் பின்புறம் இருக்கையில் பயணம் செய்பவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள்மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை இயக்குவது, தவறான வாகன எண் பலகை பொருத்துதல், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், சாலையில் போக்குவரத்து நிறுத்தற்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட ட்விட்டர் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நடவடிக்கையின் விவரங்கள் ட்வீட்டர் பக்கங்களில் பகிரப்படுகின்றன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் ட்விட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதுஇவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு (97.8% அளவில்) நடவடிக்கை எடுக்கப்பட்டு மீதமுள்ளவை முன்னேற்றத்தில் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 50 விதிமீறல்கள் பதிவாகி ட்விட்டர் பக்கத்தில் பறிமாறப்படுகின்றனஇவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ட்விட்டர் பக்கத்தின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்று வருகிறது.சென்னை பெருநகர காவல்துறையினர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் சமூக ஊடக செயலியான ட்விட்டர் பக்கத்தை கையாளுதல்கள் மூலம் போக்குவரத்து பக்கத்தில் பொதுமக்களின் வரவேற்பை பெறுவதுடன் அவர்களின் பாராட்டையும் பெறுகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் நடத்தையை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனஇந்த கேமராக்களின் சேவையானது போக்குவரத்து காவல் துறையினரின் “மூன்றாவது கண் ஆக இருந்து வருகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக ஊடகத்தை “நான்காவது கண்” எனப் பயன்படுத்தி தொடர்ந்து விழிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் இருக்கும் குடிமக்களை தீவிரமாக கண்காணிக்க இந்த சமூக வலைதளம் பயன்படுகிறது.

via News J : https://ift.tt/bq09fvz