வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
பழமொழி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

விளக்கம் – ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும்.

இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து.

மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.
Photo from Raajan @ Singapore/Karur
குரல் *ஒலி நூல்*
https://youtu.be/GeUTF3PTSs0

*சுத்தமான* ..
*உண்மை* யான
*வாசியோக* +
*மௌன யோக*
(பிரம்ம)
வித்தைகளை
*சித்தவித்தை* யாக கற்க..பழக..

*சித்தவேதம்*
எனும் நூலின்
*கருத்துக்களை*
உங்கள் *மனம்*
*ஏற்றிருக்க* வேண்டும்.
🗣️👆..👌🏻

🔮
*அகில* பிரபஞ்சத்தையே
*ஆளும்* ..
சதாசிவமான..
*பைரவ* தன்மையனாக
நீங்களே *மாறிட* ..

சித்தவித்தை
*ஒன்றே* போதுமான
*பிர்ம* வித்தையாகும்.
🔮
*மெய்பொருள்*
உபதேசத்தை *விட..*
*நிஷ்டை* எனும் *மௌன வித்தை* மிக மேலானது.

🙏ஆத்ம நன்றிகள்🙏
www.t.me/truthsofsivayoga
வாதம் வைத்தியம்
Photo
*வர்மக்கலை..!*

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று.

வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள்.

வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும்.

பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம்.

எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும்.

ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32

இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது.

முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும்.

நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.

இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும்.

பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்).

நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.

அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன.

அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.

மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன.

இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன.

இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.

அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.

12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன.

படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.

இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் "அக்கு பஞ்சர்" போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும்.

ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.

தலைப்பகுதி வர்மங்கள் (37)

1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர
வாதம் வைத்தியம்
Photo
பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)

1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)

1.உதிர்க் கால வர்மம்
2.பள்ளை வர்மம்
3.மூத்திர கால வர்மம்
4.குத்து வர்மம்
5.நேர் வர்மம்
6.உறுமி கால வர்மம்
7.ஆமென்ற வர்மம்
8.தண்டு வர்மம்
:9.இலிங்க வர்மம்
10.ஆண்ட கால வர்மம்
11.தாலிக வர்மம்
12.கல்லடைக் கால வர்மம்
13.காக்கடை கால வர்மம்
14.புச வர்மம்
15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)

1.மேல் சுருக்கி வர்மம்
2.கைக்குழி காந்தாரி வர்மம்
3.மேல்க்கைப் பூட்டு வர்மம்
4.கைச் சிப்பு எலும்பு வர்மம்
5.பூணூல் கால வர்மம்
6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
7.கச்சை வர்மம்
8.கூச்ச பிரம்ம வர்மம்
9.சங்கு திரி கால வர்மம்
10.வலம்புரி இடம்புரி வர்மம்
11.மேல் சுருக்கு வர்மம்
12.மேலாக கால வர்மம்
13.கீழாக கால வர்மம்
14.தட்டேல்லு வர்மம்
15.மேலஅண்ட வர்மம்
16.நாயிருப்பு வர்மம்
17.கீழ் அண்ட வர்மம்
18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)

1.வலம்புரி இடம்புரி வர்மம்
2.தல்லை அடக்க வர்மம்
3.துதிக்கை வர்மம்
4.தட்சணக் கால வர்மம்
5.சுழுக்கு வர்மம்
6.மூட்டு வர்மம்
7.மொளியின் வர்மம்
8.கைக்குசத்திட வர்மம்
9.உள்ளங்கை வெள்ளை வர்மம்
10.தொங்கு சதை வர்மம்
11.மணி பந்த வர்மம்
12.திண்டோதரி வர்மம்
13.நடுக்கவளி வர்மம்
14.சுண்டு விரல் கவளி வர்மம்
15.மேல் மணிக்கட்டு வர்மம்
16.விட மணி பந்த வர்மம்
17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)

1.முதிர கால வர்மம்
2.பத்தக்களை வர்மம்
3.ஆமைக்கால வர்மம்
4.பக்க வர்மம்
5.குழச்சி முடிச்சி வர்மம்
6.சிறுவிரல் கவளி வர்மம்
7.சிரட்டை வர்மம்
8.கால் மூட்டு வர்மம்
9.காலக் கண்ணு வர்மம்
10.நாய்த் தலை வர்மம்
11.குதிரை முக வர்மம்
12.கும்பேறி வர்மம்
13.கண்ணு வர்மம்
14.கோணச்சன்னி வர்மம்
15.கால வர்மம்
16.தட வர்மம்
17.கண் புகழ் வர்மம்
18.அனகால வர்மம்
19.பூமிக் கால வர்மம்
20.இடுப்பு வர்மம்
21.கிழிமேக வர்மம்
22.இழிப் பிழை வர்மம்
23.அணி வர்மம்
24.கோச்சு வர்மம்
25.முடக்கு வர்மம்
26.குளிர்ச்சை வர்மம்
27.குசத்திட வர்மம்
28.உப்புக் குத்தி வர்மம்
29.பாதச் சக்கர வர்மம்
30.கீழ் சுழி வர்மம்
31.பதக்கல வர்மம்
32.முண்டக வர்ம

*"இந்த வர்மக்கலையை பற்றிய தகவலை அனைவருக்கும் பகிர்ந்து தமிழர் கலையை உலகறியச்செய்வோம்"*
மூல நோய் வருவதற்கான காரணமும்
வந்த நோய் தீருவதற்கான வைத்தியமும்

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால்
எப்போதும் உடலில் வெப்பம் அதிகரித்து இருந்தால் எளிதாக மூல நோய் வந்துவிடும்

வயிற்றுப் பொருமல் மற்றும் அடிக்கடி தலை வலி ஏற்பட்டாலும் வாயில் துர்நாற்றம் வந்து விட்டாலும் வியர்வையில் அதிக நாற்றம் வீசினாலும் மூல நோய் வருவதற்கான அறிகுறிகளாகும்

பசி உணர்ச்சி இல்லாமல் இருந்தால் ஆட்டுப்புழுக்கை போல் இறுகி வறட்சியாக மலம் வெளியானால்
வரமூலம் வந்து விட்டது என புரிந்து கொள்ள வேண்டும்

மூலநோயை உடலில் ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்

அதிகாலை எழுந்ததும் சுடவைத்து ஆறிய இதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை முந்நூறு மில்லிக்கு குறையாமல் குடித்துவந்தால் மலஜலம் எளிதாக கழியும்

உடலின் வெப்பம் நீங்கும் மலச்சிக்கல் விலகி மூல நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு எளிய வழிமுறை இதுவாகும்

மூல நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் காலையில் குடிக்கும் வெந்நீருடன் இரண்டு கிராம் கடுக்காய் பொடியை கலந்து குடித்து வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் மூல நோய் வெகு எளிதாக குணமாகும்

வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் எந்த வயதிலும் மூல நோய் வராது இது உறுதி

தினம்தோறும் மதிய உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து கொண்டால் மூல நோய் வருவதைத் தடுத்து கொள்ளலாம்

தினந்தோறும் பப்பாளி பழம் வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒரு பழ வகைகளை உட்கொள்வதன் மூலமும் மூல நோய் வருவதைத் தடுத்து கொள்ளலாம்

மூல நோய் வந்து விட்டால் அதற்கான மூலிகை வைத்தியங்களில் சில

நாயுருவி இலையை மைபோல் அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து இதை நல்லெண்ணெயில் குழைத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்

நாயுருவி இலையை இடித்து பத்து மில்லி சாறு பிழிந்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இதை தினந்தோறும் காலை வேளையில் குடித்து வந்தால் பத்தே நாட்களில் மூல நோயின் தீவிரம் முழுமையாக குறையும்

பிரண்டையின் இளம் கொழுந்தை நெய்யில் வதக்கி இதை நன்றாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மற்றும் வரமூலம் போன்ற அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகி விடும்

கோவை தண்டை இடித்து சாறு பிழிந்து இதில் பத்து மில்லி எடுத்து ஆட்டுப்பாலில் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் மூலச்சூடு தணியும் மூல நோய் விலகும்

கற்றாழையின் சோற்றை எடுத்து ஏழுதரம் கழுவி இதில் ஒரு கைப்பிடி எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற உஷ்ணம் தனியும் இதன் மூலம்
மூல நோயும் முழுமையாக குணமாகும்

துத்தி இலையுடன் பாசிப்பயிறு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் துருவல் சிறிது சேர்த்து இதை பொரியலாக செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் அடியோடு விலகும்

குப்பைமேனிக் கீரையை பொரியல் செய்து சாப்பிடாலும் அல்லது இதை சூப்பாக செய்து பருகி வந்தாலும் எந்த வயதிலும் மூல நோய் வரவே வராது

மூலம் பவுத்திரம் முற்றிய நிலையில் இருந்தால் அதற்கான மூலிகை வைத்தியம்

அரிசித் திப்பிலி ஐம்பது கிராம் ஆனைதிப்பிலி ஐம்பது கிராம் குப்பைமேனி நூறு கிராம் இவைகளை அளவுகளின் முறைப்படி இடித்து பொடி செய்து இதை ஒன்றாகக் கலந்து இதில் ஐந்து எடுத்து பசு நெய்யில் குழைத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து விதமான மூல நோய்களும் முழுமையாக விலகிவிடும்

சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு இதை நன்றாக மை போல அரைத்து பசும் வெண்ணெயில் குழைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர மூலக்கடுப்பு மூலத்தில் ஏற்படும் வீக்கம் அரிப்பு மற்றும் தினவு போன்ற மூலத்தால் ஏற்படுகின்ற அனைத்து தொந்தரவுகள் நீங்கும்

துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோயின் தீவிரம் பத்தே நாட்களில் முழுமையாக விலகிவிடும்

ஒரு முக்கிய குறிப்பு

மூல நோய்க்கு மூலிகை மருத்துவத்தை கையாளும் பொழுது உப்பு புளி காரத்தை கட்டாயமாக உணவில் குறைத்துக் கொண்டு பால் மோர் தயிர் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உணவில் சேர்த்து கொண்டால் மூலநோய் எளிதாக குணமாகும்
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
☀️ஆத்ம 🌟
வணக்கங்கள்
அனைவருக்கும்.🙏

சித்த வித்தை தந்த
ஞானபிதா.
ஆத்மபிதா.
ஜெகத்ஜொதி.

ஶ்ரீ சிவானந்த பரமஹம்சர்
தன்னுணர்வில் தானாக
முதலில்
ஜீவேஸ்வர ஐக்கியமாகிய ஸ்தலம் பழனி மலை அடிவாரத்தில் தான்.

அவ்விடம்..
Location in Maps :👇🏼
https://goo.gl/maps/9JCkkdtPyXy

பழனி-வெள்ளைவேஷ்டி ஆசிரமம்
என்றும் அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

ஆத்ம பிதா
ஜீவ ஐக்கியமான
முதல் (1) ஸ்தலம் பழனி மலையே.
(படம் # : 1, 2)
&
இரண்டாவது
ஜீவ ஐக்கிய ஸ்தலம்
கேரளாவில் - வடகரை ஊரில்,
சித்த சமாஜ தலைமை
வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
👇📸🎞️📺
பழனியிலுள்ள பழைய
கட்டிடம் (படம் # : 1,3,4,5)
சிதிலமடைந்ததாகவும்,
அதிகமாக பயன்படுத்திட
இயலாததாகவும் இருந்த
நிலையில் இருந்து..

தற்போது..
அவைகளை மறு உருவாக்கப்
பணியில் (படம் # : 9) திட்டமிடப்பட்டு
புதிதாக கட்டமைக்கும் பணிகள்
(படம் # : 7,8)

ஜீவ ஐக்கிய
கட்டிட நிதி
பெயரில்.. நடைபெற்று
கொண்டிருக்கிறது.

🙏🙏
சித்தவித்தையின்பால்
ஆத்மார்த்தமான..
மதிப்பும்-நன்றியும்
கொண்டிருக்கும்..
சித்தவித்தியார்த்திகளும்
பிரம்மஶ்ரீ க்களும்..
🌟🙏☀️
மேற்படி பணிகள்
தடையற நிறைவேற..

[பேதங்களேதுமின்றி]
தங்களால் இயன்ற..

உதவிகளை
வழங்கிடவும்,
குழுவாக ஒருங்கிணைந்து உதவிடவும்..

மலேசிய
தபோவனம் போல
மேன்மையுறச்
செய்து, அத்தலத்தின்
ஜீவன் மேலோங்கச்
செய்திடவும் வேண்டுகிறோம்.

🙏🌏🙏
(படம் #10,11,12)
நிதி வழங்கிடும்
அறக்கட்டளையின்
வங்கி க/கு விபரம் : 👇
🌦️💰💲💱💳
அகில உலக சித்தவித்யா
அபிவிருத்தி சங்கம்,
இந்தியன் வங்கி - பழனி கிளை.

AKILAULAGA SIDDHA VIDHYA
ABIVIRUDHI SANGAM,
INDIAN BANK - PALANI BRANCH,
Current A/C No. 66787 28275
IFSC Code : IDIB000P014

📲🗣️📳
தொடர்புக்கு :
R. ஆனந்தகுமார்
(செயலாளர்)
+91 94433 01615
🌏🚙🛤️🚦

ஆசிரம முகவரி:
ஞானபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் ஜீவ ஐக்கிய நிலையம். பழனி மலை - தெற்கு அடிவாரம்.
🙏
Akila Ulaga Siddha Vidhya
Abivirudhi Sangam,
Varatharu road, Adivaram-South,
(Near Kodai Rd - Signal junction)
Palani Dt, Tamil Nadu-624601.INDIA.
🌏🚦🌏
Location in Maps :👇🏼
https://goo.gl/maps/9JCkkdtPyXy