வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*🤔உடலின் மொழி🤔*

1. உடல் - உணவை கேட்கும் மொழி - *பசி*

2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - *தாகம்*

3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - *சோர்வு,தலைவலி*

4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - *தும்மல், சளி, இருமல்.*

5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி *காய்ச்சல்*

6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - *வாய் கசப்பு மற்றும் பசியின்மை*

7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - *உடல் அசதி*

8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *வாந்தி*

9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *பேதி*

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *வியர்வை*

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - *உறக்கம்*

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *சிறுநீர் கழித்தல்*

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி -
*மலம் கழித்தல்*

எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.
உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நலம் எனும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவு
ம், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
*நம் உடலை நேசிப்போம்.....
இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகிறார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ - எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை (sub-conscious) எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலைதான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

இதோ பயிற்சிக்கான எளிய வழிகள்:

• முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்து கொள்ளவும்.

• பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து, சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும். இதே போன்று மூன்று முறை செய்யவும்.

• பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, 'ரிலாக்ஸ்' என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

• பயிற்சியின்போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

• உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் (Elevator) மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னும் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

• இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்து விட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

• இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

• பிறகு, அந்த குறிக்கோள் முழுமை அடைவதை பல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

• இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

• பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, 'மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன்' என்று கூறிக் கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும்போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும். நம் உடலில் உள்ள பயோகிளாக் (bio-clock) அதை தானே செட் செய்து கொள்ளும். அந்த நேரம் முடிந்ததும் தானாகவே பயிற்சியிலிருந்து நீங்கள் வெளியேறுவதை உணர்வீர்கள்.

பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:

• நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்.
• இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
• என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.
• நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
• எனக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.
• நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை
Photo from Raajan @ Singapore/Karur
🌴🌴🌴🌴🌈😍🌈🌴🌴🌴🌴


*🪀பகிர்வு🪀*


*"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."*

"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....

நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்...

எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...

புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான்.ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில் பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம். பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனைபேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத்தெளிவும்(ஞானம்)பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...

சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும்பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன்வேரினடியில் நீரைஊற்றி சுற்றிவா... என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர். நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தைமட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச்சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்படவேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது. அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது....

இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்துபாருங்கள்.... அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்துவிட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத்தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....

அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதி,
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம்...
இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....

எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன. பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே.இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்...
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
குமார பர்வதம்
எனும் *புஷ்பகிரி*
மலை பயண🏞️ காணொளிகள் இங்கே 👇

https://youtu.be/CrcJvjQYBkc

https://youtu.be/kMy9hWk1Y5A

https://youtu.be/HzkVpXja1Lo

போகர் ஏழாயிரம் ஏட்டில் இந்த *ஸ்தலத்தின் மகிமை* பற்றி கூறியுள்ளார்.

இந்த மலையின்
*Subramanya Ghaut* (West Karnataka)
பகுதியில்..

ஶ்ரீ முருகர் எனும்
*குமரகுரு* வாகிய
சுப்பிரமணிய ரின்
*பால வர்க்க* சீட சித்தர்கள் பலரும் அருவாய் ஒளியாய்
உலாவுவதாக குறிப்பு தருகிறார்.
🌾இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்கள்
கிடைக்கும்

🌾மாப்பிள்ளை சம்பா அரிசி - 75₹
,🌾காட்டுயானம் அரிசி - 75₹
🌾கருங்குருவை அரிசி - 76₹
🌾பூங்கார் அரிசி - 76₹
🌾குருவிக்கார் அரிசி - 75₹
🌾குள்ளக்கார் அரிசி -. 70₹
🌾அறுபதாம் குறுவை அரிசி 75₹
🌾சீரக சம்பா பச்சரிசி -100₹
சீரக சம்பா புழுங்கல் அரிசி 100₹
🌾கிச்சிலி சம்பா அரிசி 65₹
(🌾கைக்குத்தல் பொண்ணி- 60₹
🌾சிகப்பு அரிசி - 60₹
.இட்லி அரிசி 40₹
ரோஸ் அரிசி 60₹}
மாப்பிள்ளை சம்பா குருணை 50₹
காட்டுயானம் குருணை 53₹
🌾கருப்பு கவுணி அரிசி - 140₹
🌾 கருப்பு கவுனி புழுங்கல் அரிசி 180₹

பச்சைப்பயிறு -105₹
கருப்பு முழுஉளுந்து -110₹
கருப்பு உளுந்து உடைத்தது 120₹
{சிகப்பு அவல் கெட்டி -60₹
.சிவப்பு அவல் நைஸ் 60₹
மாப்பிள்ளை சம்பா அவல் 70₹
வெள்ளை அவல் கெட்டி 60₹
வெள்ளை அவள் நைஸ் 60₹
நாட்டுச்சக்கரை 65₹}
(சிறுதானியம் பச்சரிசி
வரகுஅரிசி- 70₹
சாமை அரிசி . -80₹
குதிரைவாலி அரிசி -80₹
திணை அரிசி -68₹)
பனிவரகு120₹
[சிறுதானியம் புழுங்கலரிசி
வரகு அரிசி90₹
சாமை அரிசி 90₹
குதிரைவாலி அரிசி 90₹]
தினை தானியம்50₹
{நாட்டுக் கம்பு - 55₹
கம்பு 40₹
கேழ்வரகு - 35₹
சோள அரிசி 75₹
மக்காச்சோளம்35₹
சிவப்புசோளம்60₹}
[கோதுமை35₹
இந்துப்பு கல் 60₹
இந்துப்புதூள் வெள்ளை60₹
இந்துப்புத்தூள் பிங்க்60₹]
{பார்லி 60₹
வெள்ளைசோயா105₹
ராஜ்மா120₹
சூரியகாந்தி விதை110₹
(வெள்ளை கொள்ளு - 55₹
,கருப்பு கொள்ளு - 60₹
வெள்ளை சோளம் 55₹
சிவப்பு சோளம் - 60₹

[இவைகளை பெற விரும்புவோர் ஒரு பொருளில் 5கிலோ அளவில் பெற்றுக்கொள்ளலாம்]

(🎋மூங்கில் அரிசி _
கொடம்புளி 270₹
பனங்கற்கண்டு - 350₹
ஆலிவிதை120₹
இவைகளை 1 கிலோ முதல் பெறலாம் )
{இவைகள் 1 கிலோ அளவுக்கொண்ட விலை பட்டியல்}
(வெள்ளை ரக பாரம்பரிய கைக்குத்தல் மற்றும் தீட்டிய அரிசிகள்
சிவன் சம்பா1750₹
வெள்ளைப் பொன்னி1400₹
தூயமல்லி1650₹
கைக்குத்தல் தூயமல்லி1750₹
கிச்சிலி சம்பா1650₹
இவைகள் 25 கிலோ சிப்பமாக புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி ஆகியவைகள் கிடைக்கும்)
அனைத்து ஊர்களுக்கும் 🚚பார்சல் அனுப்பப்படும்
1கிலோமுதல்
50கிலோ வரை 120₹முதல் 160₹ வரும் தங்களுடையது
பதிவு தேதி15.02.21
தேவைக்கு வாட்ஸ்அப்
https://wa.me/919380225365
சுடர் வேளாண் சந்தை
நன்றி வணக்கம் 🙏

பாரம்பரிய அரிசிகள் சிறுதானியங்கள் இவைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது மற்றும் உடல் உபாதைகள் நீங்கி உடல் வலுப்பெறும்
பசித்து புசி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்