வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
இது தோல் நோய் பிரச்சினை அதிகமுள்ளவர்க்கு வெளி பிரயோகத்தினால் நல்ல பலனை தரவல்லது.
Audio
Audio from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Audio from Raajan @ Singapore/Karur
வெட்பாலை தைலம்+குப்பைமேனி இலை உபாயம்
நெடுநாள் தோல் புண் நோய்கள் உள்ளவர்க்கு உபாயமுறை குரலொலியில்.
வாதம் வைத்தியம்
Photo
#வயிற்றுப்பூச்சிகளை_அழிக்கும்_சுண்டைக்காய்...

1. வயிற்றுப் பூச்சிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகர் எதுவும் இல்லை.

2. அடிக்கடி சுண்டைக்காயை சேர்த்துக் கொள்பவர்களுக்கு நச்சுக் கிருமிகள் உடலில் தங்காது.

3. சுண்டைக்காயை நுண்ணூட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.

4. இதில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சி, இ போன்ற சத்துக்கள் எக்கச்சக்கமாக அடங்கியுள்ளன.

5. ரத்தக்குழாயில் கொழுப்பை படியவிடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

6. இவைகள் மட்டுமின்றி சுண்டைக்காய் கீழ் காணும் நோய்களுக்கும் தீர்வு வழங்குவதாக கூறப்படுகிறது.

*செரிமானக் கோளாறுகள்
*வாயுப் பிரச்சனைகள்
*பக்கவாதம்
*சளி
*தலைவலி
*வயிற்றுவலி
*மூலம்
*ஆஸ்துமா
*ரத்த சோகை

7. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் இரத்த சோகை ஏற்படாமல் பாதுக்காக்க முடியும். இரத்த சோகையை விரட்டும் தன்மைக் சுண்டைக்காயிற்கு உண்டு.

8. இரத்த குழாய்களில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைக்க இது உதவுகிறது. மேலும் உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் நடுக்கம், மயக்கம், சோர்வு, மூச்சுக் கோளாறுகள் போன்றவை நீங்கும்.

9. குழந்தைகள் இதை சாப்பிடுவதால் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும். வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வலி, மலச்சிக்கல் போன்றவை வராமல் பார்த்து கொள்ளலாம்.

10. சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. குழந்தை பெற்ற பெண்மணிகள் இதை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்

விரைவில் நம்ம வீட்டுத் தோட்டத்தில் ஒரு சுண்டைக்காய் செடியை நட்டு வையுங்கள்.
வாதம் வைத்தியம்
Photo
🥨 *வயிறு* 🥨

😎இந்த வயிறு வயிறுன்னு எல்லாருக்கும் ஒரு வயிறு இருக்கும்..
சிலருக்கு பானை மாதிரி இருக்கும்,
சிலருக்கு பூனை மாதிரி இருக்கும்,
சிலருக்கு பாம்பு மாதிரி இருக்கும்,
சிலருக்கு பத்து மாசம் மாதிரி இருக்கும்,
ஆனா கண்டிப்பா வயிறுன்னு ஒண்ணு இருக்கும்!....

● சரி அந்த வயிறு எப்படி வேலை செய்யுதுன்னு எத்தனை பேருக்கு தெரியும்!...

அது நமக்காக எவ்ளோ கஷ்டப்படுதுன்னு, அதை நம்ம எவ்ளோ கஷ்டப்படுத்துறோம்னு எத்தனை பேருக்கு தெரியும்!...

😆 வாங்க ஒரு முறை
வயித்துக்கு உள்ள போயி பாப்போம்!...

வாயில ஆரம்பிச்சு, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மலக்குடல் இப்படி நிறைய பேரோட சம்மந்தப்பட்டு இருக்கு நம்ம வயிறு!,

வயித்துல மட்டும் ஆயிரக்கணக்கான பேர் வேலை செய்யறாங்க!... எப்போ நம்ம எதை உள்ள போடுவமோன்னு தெரியாம எல்லா நேரத்திலயும் தயாரா
வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க!..
மத்த நேரம் முன்ன பின்ன இருந்தாலும் மதியம் ஒரு மணி ஆச்சின்னா
எல்லாரும் இரைப்பையில ஆவலா கும்பலா உட்கார்ந்திருப்பாங்க,...

அதுக்கு மேல லேட் ஆச்சின்னா,
அவங்களுக்கு அவங்களே பேசிப்பாங்க,
என்னண்ணா இன்னும் ஒண்ணும் காணோம், மணி ஒண்ணுக்கு மேல ஆகுது எங்க போனான்னு தெரியலயே
என்று பேச்சு ஆரம்பிக்கும், இரு இரு எங்க போகப்போறான், ஏதாவது வேலை இருக்கும் எனும் போது இன்னொருவன் சொல்வான், அண்ணே பிரைன்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு,..

இப்போ தான் ஓட்டல்ல போய்
உட்கார்ந்திருகானாம், கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்திடும்!...

சரி சரி எல்லாரும் ரெடியா இருங்க
இவன பத்தி தான் தெரியும்ல எனும் போதே, உள்ளே ஒரு உருண்டை குஸ்கா வந்து விழும்,...

என்னாணே இன்னக்கும் இவன்
பிரியாணி சாப்பிட போயிருக்கான்,
அதெல்லாம் பேசிட்டிருக்க நேரமில்ல
ஆளாளுக்கு வேலைய பாருங்க
எனும் போதே மேலும் மேலும் பிரியாணி வந்து விழ, எல்லோரும் எழுந்து
ஹைட்ரோ குளோரிக் ஆசிட் கொண்ட
பைப்பை திறந்து விடுகிறார்கள்!...

அந்த ஆசிட் பிரியாணி முழுவதும்
கலக்கிறது!...

ஆளுக்கொரு பக்கம் வேலை
செய்து கொண்டு இருக்க, அண்ணே மொத்தம் அரிசி அரிசியா வருதுண்ணே, கொஞ்சமாவது அவனை மென்னு அசை போட்டு அனுப்ப சொல்லுங்கண்ணே,...

மேல தான் உமிழ்நீர் இருக்கு இல்ல
அதுல கொஞ்சம் கலந்து
அனுப்ப முடியாதா இவனால....

அண்ணே நேத்து மாதிரியே
இன்னைக்கும் தந்தூரி
சிக்கன் சாப்பிடுறாண்ணே,

என்ன மசாலா என்ன கருமமோ வேலை செய்ற நமக்கு உடம்பெல்லாம் எரியுது என்றபடி, எல்லோரும் ஆசிடை தெளித்து
கூழ் போல் ஆக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்!...

அவர்கள் அவசர அவசரமாக கடினமாக உழைத்து ஆசிட் தெளித்து கூழாக்க,
மேலிருந்து எண்ணெய், மசாலா காரம், உப்பு என்று எது எதுவோ அதிகமாக வந்து அரைகுறையாக விழுந்து கொண்டே இருக்கிறது!...

இந்த காரத்தின் வீரியத்தில்
பலர் இறந்து போகிறார்கள்,
உட்புற சுவரில் செல்லரிப்பது போல்
அரித்து போகிறது!..

அதற்கு ஒரு பக்கம் மருந்துபோட்டு
வேலையை தொடர்வதற்குள் மீண்டும் மேலிருந்து, கோக் பெப்சி போன்ற ஏதோ
கெமிக்கல் சேர்த்த தண்ணீர் கிழே வந்து விழ, இன்னும் சிலர் இறந்து போகிறார்கள்,

ஆட்கள் போதவில்லை என்று மேலே மனு கொடுத்து இன்னும் சிலரை வேலைக்கு வைக்கிறார்கள்!...

கூழாக மாற்றி அடுத்த கட்டத்திற்கு
அனுப்புவதற்குள், உள்ளே ஆட்கள்
வேலை செய்ய கூட இடமில்லாமல்
அந்த சாப்பாட்டு ராமன் வயிறு முட்ட தின்று முடிக்க இரைப்பை முழுவதும் திணறி போகிறது!...

இப்படி இருந்தா எப்படிண்ணே,
என்னைக்காவது ஒரு நாள் இப்படி போட்டா அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யலாம்,

மூணு வேளையும் இப்படியே வயிறு புல்லா போட்டு, பத்தாததுக்கு தண்ணிய வேற ஊத்தி விடுறான் எல்லாத்தையும்
சரி பண்ணி அனுப்பி வைக்கிறதுக்குள்ள உயிர் போயி உயிர் வருதுண்ணே, என்று புலம்ப,

நல்ல வேளை அவன் தண்ணி
அடிக்கலண்ணு சந்தோஷப்படுங்க
தம்பி என்று கூற,...

யாரு சொன்னது, போன சனிக்கிழமை எங்கேயோ பார்ட்டின்னு போயி,
கண்ட கண்ட சரக்கு, கண்ட கண்ட நான்வெஜ்ஜுன்னு ராத்திரி 12 மணி வரைக்கும் உள்ள தள்ளிட்டே இருக்கான்,
எங்களால ஒண்ணும் முடியல,

ஆல்கஹால்ல மாட்டி கும்பல் கும்பலா
இறந்துட்டாங்க,....

வந்த கோபத்துல எல்லோரும் சேர்ந்து
வேலை செய்ய முடியாதுன்னு எதிர்த்து வெளியே தள்ளுனோம் அதுக்கப்புறம் தான் வாந்தி எடுத்தான்!...

சாப்பிடுறது தப்பில்லண்ணே நிறுத்தி நிதானமா எண்ணெய் மசாலா எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா மென்னு சாப்டா அவனுக்குத்தான் நல்லது,...

கண்ட கருமத்தை எல்லாம்
அரைகுறையா தின்னு தின்னு வயிறு பாருங்க கழுதை மாதிரி வீங்கி போயிருக்கு,...😂

உள்ள மொத்தம் ஒரே புண்ணாயிடுச்சி,
சிறுகுடல் பெருங்குடல்ல வேற ரத்த கசிவு இருக்குன்னு ஒரே கம்ப்ளைன்ட்டு,
கணயம், கல்லீரல் எல்லாம் இப்பவே முடியலன்னு உட்கார்ந்துட்டாங்க
நாளை பின்ன சீரியஸ் ஆச்சின்னா
அவன் தான் சாகப்போறான்
நமக்கென்ன,...

தின்னும் போது நல்லது கெட்டது
பாத்து தின்னாம மாடு மாதிரி
கண்டதை மேய்ஞ்சா இதான் கதி!...

சரி வாங்க, சாகுற வரைக்கும்
நம்ம
வாதம் வைத்தியம்
Photo
ை நம்ம செய்வோம்,
அந்த பக்கம் யாரும் போகாதீங்க,
சுவரு எல்லாம் மொத்தம் தின்னுட்டு
ஒரே ரத்தமா இருக்கு...!

🤗🤗🤗உங்கள் வயிற்றின் உள்ளே வாழும் நுன்னுயிர் எனும் அப்பாவிகள்.

இணையப் பகிர்வு.
வெந்நீரில்_இவ்வளவு_விஷயம்_இருக்கா…_!!.pdf
86.9 KB
வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…...!!.pdf
Photo from Raajan @ Singapore/Karur
உண்மையில்
சித்தர்கள் கூற்றின்படி..

"விந்து"
என்பது

மௌனம்,
*ஆதி இருள்,*
கடுவெளி,
*முப்பாழ்,*
சூன்யம்
சிவம்
பரம்

என்றே பல பதங்களில்
தெளிவு செய்வதால்..

நம்முடலினூடே
ஊறிவரும்..
சுக்கில சுரோணிதத்தை
"விந்து"என்று
பொருள் கொள்வது
மடமையாகும்.
அதனை "மணி"
யாக்கும்
முயற்சிகளும்
வீணே யாகும்.

🙏ஆத்ம நன்றிகள்!
Photo from Raajan @ Singapore/Karur