வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Audio
வேதசக்தி
சித்தர் கலைகளில்
ஒன்றான வர்மகலையை
பிணி நோக்கில்
கற்கும் வகுப்பினை
பற்றிய அடியேனுடைய பகிர்வுரை
போகர் *ஜீவநாடி* அற்புதம் :

குழந்தையின்
இருதய துவாரத்தை
சிவபெருமானைக் கொண்டு
நீங்கிட செய்த
போகரின் ஜீவநாடி அற்புதம் !!

ஒன்றை

காலம் சென்ற புனிதர்.
திரு.
அநுமத்தாசன் எனும் தா.கி ராமசாமி ஐயா
( அகத்தியர் ஜீவநாடி அருளாளர்-
சென்னை)
தனது நாடி அனுபவங்கள்
கட்டுரை வழியே
விவரிக்கிறார்.

அவசியம்
வாசித்து சித்தர்களின்
கருணையை
உணருங்கள் அன்பர்களே!!

சித்தர்களின்
அரிதான
ஜீவநாடி
அற்புதங்கள்
மேலதிக பகிர்வுகள் :

மின்னூலாக👇
https://t.me/jeevanaadi/3299

வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
Media is too big
VIEW IN TELEGRAM
ஈஷா மண் காப்போம்
நடத்தும்

*மூன்று மாதத்தில் நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி*

*நாள்:* ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை

*இடம்:* ஈஷா இயற்கை விவசாய பண்ணை, செம்மேடு,கோவை.


💯🟢இயற்கை விவசாயம் அ முதல் ஃ வரை களப்பயிற்சி

💬💹 மதிப்புகூட்டுதல் & சந்தைப்படுத்தும் வழிமுறைகள்.

🚎வெற்றி விவசாயிகளின் பண்ணைக்கு சுற்றுலா.

*வயது வரம்பு:* 23 முதல் 40 வரை ஆர்வமுள்ள இளைஞர்கள்.

உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.
வைப்புத் தொகை (10,000) பயிற்சியின் இறுதியில் உங்களிடமே ஒப்படைக்கப்படும்.

📜👥 சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

*மேலும் தொடர்புக்கு*
திரு.அஜித்குமார் - +91 63832 62508
*தொடர்பு கொள்ளும் நேரம்:* காலை 08 am –07 pm
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மூச்சினை உள்ளிழுத்து நுரையீரல்களின் பலம் குறித்து நம்பிக்கை உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
மூலர் வரிசை சித்தர் ஸ்ரீ.
காளாங்கி நாதர்

*நம்பி மலை* யில்
உருவாக்கிய
*சித்தரை* பற்றி..

ஸ்ரீ அகத்தியர் ஜீவநாடியில்
(**அனுமத்தாசன்
@ 2004) ஒளிர்ந்த
சம்பவம் ஒன்றை
விவரித்துள்ளார்..

🔆👇
உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம் என்று நாளிதழை புரட்டினேன்.  சிறிது நேரம் வாசித்தும் மனம் எதிலும் ஒன்றாமல்,

சும்மாவேனும் அகத்தியர் நாடியை புரட்டுவோம், அகத்தியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற நப்பாசையில் நாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்த பின் "ஏதேனும் சொல்கிறாரா?" என்று பார்த்தேன்.

எதிர் பார்த்தது போலவே, அகத்தியர் நாடியில் வந்து, அதிகம் வெளி உலகறியாத ஒரு சித்த புருஷரை பற்றி கூறினார்.  அதை பார்ப்போம் இன்று.

"ஏன்பா! நீ என் கூட மலைக்கு வருகிறாயா?" என்றார்.

பசி அகன்ற சந்தோஷத்தில் அந்த பையன் "சரி" என்று தலையாட்டினான்.

அவனையும் அழைத்துக் கொண்டு அவர் மலையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அவர்கள் சென்று சேர்ந்த இடம், திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் "நம்பி மலை".

மலையின் மேலே ஒரு நீரோடையின் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் அவனை அமரச்செய்து, மந்திர உபதேசம் செய்து விட்டு,

"நான் திரும்பி வரும் வரை, நீ இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டு த்யானத்தில் இரு.  
பசித்தால் இந்த பச்சிலைகளை உண்ணு.  தேவை ஏற்படும் போது இந்த ஊற்றிலிருந்து நீரை குடித்துக்கொள்" என்று கூறி செல்லத்தொடங்கினார்.

சட்டென்று நினைவு வந்தவனாக "நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?" என்றான்.

"நான் நிச்சயமாக உன்னை வந்து சந்திப்பேன்" என்று கூறி சென்றார் அவர்.  அவனுக்கு தெரியாது அவர் திரும்பி வர வெகு நாட்களாகும் என்று.

அவர் சொன்னபடியே த்யானத்தில் அமர்ந்து, அவர் சொல்லிப்போன மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருந்தான்.  அவர் வருவதாக காணேம்.  இருட்டும், நடு இரவு நேரமும் சேர்ந்த தருணத்தில் வன விலங்குகளின் மிக ஆக்ரோஷமான சப்தங்கள் அவனை உலுக்கியது.  

கண்ணை திறந்து பார்க்க நிலா வெளிச்சத்தில் உயரமாக வளர்ந்த மரங்களின் நிழல்கள் கூட அவனை பயமுறுத்த, ஒரு மனிதர் கூட அருகில் இல்லாததை உணர்ந்த அவன் தன்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று நினைத்து

"இனி! அவர் சொன்ன மந்திரம் ஒன்று தான் நம்மை காப்பாற்றும்" என்று தீர்மானித்து கண்ணை இருக்க மூடிக்கொண்டு மந்திரத்தை ஜெபித்தபடி வெளியுலக நினைவை மறக்க எத்தனித்தான்.

மந்திர ஜெபம் மேலும் மேலும் தொடர, அவனுள் புது தைரியம் பிறந்தது.  ஒரு நிலையில் உடல் மிக மென்மையாக மாற, மிக வேகமாக உற்சாகமானான்.  மந்திரத்தை தொடர்ந்தபடி இருந்தான்.

அந்த சாது திரும்பி வரவே இல்லை.

இரவு முதல் ஜாமத்தை நெருங்க, திடீரென ஒரு ☀️வெளிச்சம் அவன் முன் தோன்றியது.  அசரீரியாக வார்த்தைகள் அதிலிருந்து அவனுக்கு உத்தரவாக வந்தது.

"இன்று முதல் நீ நம்பிமலை சித்தன் என்று அழைக்கப் படுவாய்.

 உன்னில் சித்தத் தன்மை உருவெடுக்கும்.  இந்தக் காட்டில் வந்து இங்குள்ள பச்சைமால் இறைவனை வழிபட வரும் அனைவருக்கும் இங்கு உலவும் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு அளித்து தொண்டு செய்வாய்" என்றது.

அந்த நிமிடம் முதல் அவனுக்குள் உடல் ரீதியாக பல மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது.  அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன்,

அவன் சுவாச முறையில் யாரோ உள்ளுக்குள் புகுந்து நிறைய மாற்றங்களை செய்வதை வாசி லயமாகி ஒடும் ஓட்டத்தை உணர்ந்தான்.

 அது, அந்த நிமிடம் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது.  அன்று முதல் அவன் சித்தனாக மாறினான்.

அந்த சித்தன் தன் தவ வலிமையினால், பின்னர் தனக்கு சித்தத் தன்மையை அருளியது மூலரின் சீடர் ஸ்ரீ காலங்கிநாதர்  சித்தர்  என்பதை உணர்ந்து,

அவரை குருவாக ஏற்றுக்கொண்டு இன்றும் நம்பி மலையில் சூட்சுமமாகவும் வேண்டிய போது அரூபமாக வும் உலா வருகிறான்.

 தன் தபோ வலிமையினால் நம்பி மலையை வற்றாத செல்வ வளமுடைய, செழிப்பான மலையாக மாற்றி, அங்கிருக்கும் மிருகங்களின்,
மிருகத் தன்மையை
மனிதர்களை தாக்கும் குணத்தை
கட்டுப் படுத்தி,

நம்பிமலை பெருமாளை வழிபட வரும் பக்தர்களை, மலை ஏற தொடங்குவது முதல், தரிசனம் செய்து கீழே வந்து சேரும் வரை, அரூபமாக கூட நின்று வழிநடத்தி காக்கின்றார்.

இந்த நிகழ்ச்சியை அகத்தியர் உரைத்த போது ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிந்தது.  

சித்தன் என்பவன் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் உதயமாகலாம்.

 நாம் எந்த மலைக்கு சென்றாலும், அங்கேயும் அரூபமாக ஒரு சித்தபெருமான் அந்த தலத்தை காத்துக்கொண்டு
இருந்து
நமக்கும் அருள காத்திருப்பார்.

 நாம் தான் அதை புரிந்து கொண்டு
பக்குவத்துடனும் நம்பிக்கையுடனும்நடக்க வேண்டும்.

🙏☀️🙏
மேலும் அதிக பதிவுகளுக்கு..
https://t.me/jeevanaadi/3309

&

வலைப்பூ பதிவுகளுக்கு :
https://siththarkaldesam.blogspot.com/
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*ஒரு நாள் பாயாசம் சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்தவன் பாயாசத்தை கண்டாலே பயப்படுகிறான்.*

*எப்போதோ ஒரு தடவை ஒரு இடத்தில் பாம்பை கண்டவன் அந்த இடத்தை கண்டாலே பயப்படுகிறான்.*

*ஒரு இடத்தில் தங்கத்தை கண்டெடுத்தவன் மீண்டும் அந்த இடத்தில் தங்கத்தை எதிர்பார்க்கிறான்.*

*வளர்ந்துவிட்ட, மனிதனின் கை,கால்கள் எப்படி மேலும் வளர்வதில்லையோ அப்படியே, நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் மேலும் நடப்பதில்லை.*
*கிடைத்துவிட்ட பொருள் மீண்டும் கிடைக்க போவதில்லை. கிடைக்காத பொருள் மீது ஆசைபடுவது வீண் வேலை. ..*

🙏🔥🙏