வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
☀️ஆத்ம 🌟
வணக்கங்கள்
அனைவருக்கும்.🙏

சித்த வித்தை தந்த
ஞானபிதா.
ஆத்மபிதா.
ஜெகத்ஜொதி.

ஶ்ரீ சிவானந்த பரமஹம்சர்
தன்னுணர்வில் தானாக
முதலில்
ஜீவேஸ்வர ஐக்கியமாகிய ஸ்தலம் பழனி மலை அடிவாரத்தில் தான்.

அவ்விடம்..
Location in Maps :👇🏼
https://goo.gl/maps/9JCkkdtPyXy

பழனி-வெள்ளைவேஷ்டி ஆசிரமம்
என்றும் அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

ஆத்ம பிதா
ஜீவ ஐக்கியமான
முதல் (1) ஸ்தலம் பழனி மலையே.
(படம் # : 1, 2)
&
இரண்டாவது
ஜீவ ஐக்கிய ஸ்தலம்
கேரளாவில் - வடகரை ஊரில்,
சித்த சமாஜ தலைமை
வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
👇📸🎞️📺
பழனியிலுள்ள பழைய
கட்டிடம் (படம் # : 1,3,4,5)
சிதிலமடைந்ததாகவும்,
அதிகமாக பயன்படுத்திட
இயலாததாகவும் இருந்த
நிலையில் இருந்து..

தற்போது..
அவைகளை மறு உருவாக்கப்
பணியில் (படம் # : 9) திட்டமிடப்பட்டு
புதிதாக கட்டமைக்கும் பணிகள்
(படம் # : 7,8)

ஜீவ ஐக்கிய
கட்டிட நிதி
பெயரில்.. நடைபெற்று
கொண்டிருக்கிறது.

🙏🙏
சித்தவித்தையின்பால்
ஆத்மார்த்தமான..
மதிப்பும்-நன்றியும்
கொண்டிருக்கும்..
சித்தவித்தியார்த்திகளும்
பிரம்மஶ்ரீ க்களும்..
🌟🙏☀️
மேற்படி பணிகள்
தடையற நிறைவேற..

[பேதங்களேதுமின்றி]
தங்களால் இயன்ற..

உதவிகளை
வழங்கிடவும்,
குழுவாக ஒருங்கிணைந்து உதவிடவும்..

மலேசிய
தபோவனம் போல
மேன்மையுறச்
செய்து, அத்தலத்தின்
ஜீவன் மேலோங்கச்
செய்திடவும் வேண்டுகிறோம்.

🙏🌏🙏
(படம் #10,11,12)
நிதி வழங்கிடும்
அறக்கட்டளையின்
வங்கி க/கு விபரம் : 👇
🌦️💰💲💱💳
அகில உலக சித்தவித்யா
அபிவிருத்தி சங்கம்,
இந்தியன் வங்கி - பழனி கிளை.

AKILAULAGA SIDDHA VIDHYA
ABIVIRUDHI SANGAM,
INDIAN BANK - PALANI BRANCH,
Current A/C No. 66787 28275
IFSC Code : IDIB000P014

📲🗣️📳
தொடர்புக்கு :
R. ஆனந்தகுமார்
(செயலாளர்)
+91 94433 01615
🌏🚙🛤️🚦

ஆசிரம முகவரி:
ஞானபிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் ஜீவ ஐக்கிய நிலையம். பழனி மலை - தெற்கு அடிவாரம்.
🙏
Akila Ulaga Siddha Vidhya
Abivirudhi Sangam,
Varatharu road, Adivaram-South,
(Near Kodai Rd - Signal junction)
Palani Dt, Tamil Nadu-624601.INDIA.
🌏🚦🌏
Location in Maps :👇🏼
https://goo.gl/maps/9JCkkdtPyXy
Photo from Raajan @ Singapore/Karur
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தா னென்றும்,பாட்டி வைத்தியத்திலும் பலன்களிருக்குதென்றும்!
*பார்* அப்பா
*அண்ட*
*உச்சி* தனை *யறியார்* ,

*சித்தர்கள்* கூடிப்
பார்தனிலே,

*அறுபத்து நாலு யோகம்*
ஆரப்பா *இருக்குமென்று*,

*வெவ்வேறாக*
அலைந்தலைந்து,

*கெட்டவர்கள்*
அனந்தம்
கோடா *கோடி* ,

நேரப்பா *ராஜாங்க யோகம்* எனும்..
*மௌன யோகம்* ( *நிஷ்டை* ) பார்த்து,

ஆதி
*நிலை* யறிந்து *கண்* டவனே கோடிக்கு *ஒன்று* ,

வீரப்பா *வெகுபேச்சு*
பேசாமல்,

*மனக்கண் ணாலே* ,

*விந்து* வடா பாய்ந்த *தலம்*

*வெளி* யைக் *காண்* பாயே.

~ஶ்ரீ காக்கையர் மகாரிஷியின்.
| காகபுசுண்டர் ஞானம் 80* சுவடி பாடல். |

~ பிரம்மஶ்ரீ. கருவூரான்
Youtube #: karuvooraan
சாம்பிராணி, ஹோமம் செய்வதற்கு சமமாகுமா?*

ஹரி ஓம் ஷம்பே சிவ ஷம்பே மகாதோவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்.

சாம்பிராணி புகை போடுவது என்பது வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது சாம்பிராணி புகை ஆனது ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும் அதனால் தான் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும் அவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும் சாம்பிராணி போட்டு அந்த இடத்தையே தெய்வ கடாட்சத்துடன் வைத்திருந்தார்கள்..

சாம்பிராணி போடும் பழக்கம் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்னர் போடுவது மிகவும் நல்லது.

வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாம்பிராணி புகை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் போடுவது உங்களின் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் இந்த புகையை நன்கு புகைக்க விட்டு வீடு முழுவதும் மூளை முடுக்குகளிலெல்லாம் காண்பிக்க வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழியும்.

சாம்பிராணி புகையில் நீங்கள் எந்த பொருட்களையெல்லாம் போட்டால் என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கும் தெரியுமா? சாம்பிராணி புகையில் நீங்கள் காய்ந்த வேப்பிலைகளை போட்டு தூபம் இடும் பொழுது வீட்டில் இருக்கும் கொசு தொல்லை நீங்கும். மேலும் நோய் நொடிகளிலிருந்து நல்ல ஒரு நிவாரணமும் பெற முடியும். அதீத சக்திகளை கொண்டுள்ள சாம்பிராணி தூபம் அகில் போட்டு புகை மூட்டினால் அதிலிருந்து வரும் நறுமணத்தை குழந்தை பேறு இல்லாதவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் உண்டாகும்.

சாம்பிராணி தூபம் போடும் பொழுது நீங்கள் வெண் கடுகு போட்டு வெடிக்க விட்டால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கி உங்களை சூழ்ந்து இருக்கும் பாகைகள் எதிரிகள் அனைவரின் சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு விடும். சாம்பிராணியுடன் வெட்டிவேர் அருகம்புல் ஆகியவற்றை காய வைத்து தூபம் போட்டால் தோஷங்கள் யாவும் விலகி சுபகாரியங்கள் மற்றும் காரிய சித்தி உண்டாகும் நினைத்த விஷயங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க கூடிய அற்புத சக்திகள் உருவாகும்.

குலதெய்வ அருளும் வீட்டில் தெய்வ அருளும் பெற சாம்பிராணி தூபம் வெள்ளிக் கிழமையில் தூதுவளை போட்டு காண்பியுங்கள் எப்பேர்ப்பட்ட குலதெய்வ குற்றங்களும் நீங்கி இதன் மூலம் நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை உங்கள் வீட்டிற்கு அழைத்து வர முடியும் சாம்பிராணி தூபத்தில் ஜவ்வாது மற்றும் சந்தனம் ஆகிய பொருட்களை போட்டு புகை மூட்டினால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும் காய்ந்த துளசி இலைகளை போடும் பொழுது தடைகள் யாவும் விலகி வெற்றி கிடைக்கும்.

சாம்பிராணியுடன் நன்னாரி வேர் மருதாணி இலை நாய்க்கடுகு கரிசலாங்கண்ணி பொடி ஆகிய பொருட்களை போடும் பொழுது உங்களுக்கு துரோகம் இழைப்பவர்கள் கூட உங்களை நெருங்க முடியாமல் தடுக்கும் சகல ஐஸ்வர்யங்களும் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதங்களும் மகாலட்சுமியின் அருட் பார்வையும் உங்கள் மீது பரிபூரணமாகவிழும்.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சாம்பிராணி புகையை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் மட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்கும் காண்பிப்பது உண்டு பிறந்த குழந்தைக்கு மிதமான புகையை தலைப் பகுதிக்கு காண்பிக்கும் பொழுது தலையில் இருக்கும் நீர் மண்டைக்குள் கோர்க்காமல், நோய் நொடிகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்கும். எனவே சாம்பிராணி புகையை ரசாயன கலவைகள் கொண்ட நவீன வகை கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் இந்த சாம்பிராணி பொடியை போட்டு நன்மைகளை பெறலாம்.
🙏🌞🙏
வாதம் வைத்தியம்
Photo
*மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், கட்டணமில்லை.*

1. மஹோகனி
2. வேங்கை
3. தான்றிக்காய்
4. கடுக்காய் மரம்
5. ஜாதிக்காய்
6. தான்றிக்காய்
7. மாசிக்காய்
8. கருங்காலி
9. நீர்மருத
10. மலைவேம்பு
11. அரளி மஞ்சள்
12. மகிழம்
13. சரக்கொன்றை
14. செண்பகம்
15. ஃபாரஸ்ட் பிளேம்
16. வில்வம்
17. வேம்பு
18. சொர்க்கம்
19. புங்கன்
20. இயல்வாகை
21. இலுப்பை
22. நெல்லி
23. நாவல்
24. நாகலிங்கம்
25. பலா
26. நெல்லி 5
27. மாதுளை
28. கொய்யா
29. எலுமிச்சை
30. நாவல்
31. மாமரம்
32. புளியமரம்
33. கொடிபுளிக்காமரம்
34. யானை குன்றிமணி
35. பெரிய நெல்லி

*மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், கட்டணமில்லை.*

Details : +91 9884136764
*Please* *Forward* *to* *other* *Groups*
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
நுரையீரல் சுத்தம் செய்ய ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்
1.அகத்திப் பூ - 5
2.முள்ளங்கி - 1
3.தண்ணீர் - 250மி

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

👉பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை மிதமாக சூடுபடுத்தவும்.

👉மேலும் தண்ணீருடன் நன்கு கழுவிய அகத்திப் பூ சேர்த்துக்கொண்டு பாதியளவு வரும் வரை கொதிக்க விடவும்.

👉இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதனுடன் 50 மி.லி அளவு முள்ளங்கி சாறு சேர்த்துக்கொள்ளவும்.

👉இதை தொடர்ந்து 45 நாட்களுக்குக் குடித்துவந்தால், பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெறும்.

இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம்.
அனைத்தும்.. *ஏகமே* எனும்.. *அத்வைதம்* கண்ட *ஶ்ரீ ஆதிசங்கரர் பெருமான்*🙏பதம் போற்றி !!